sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Blog


    June 25

    நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 3

    முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2

    பராங்குசர் தூதுவிடுதலுக்குன்னு நான்கு பதிகங்கள் பாடினார்.  ஆழ்வார்கள் பறவைகளைத் தூதுவிடுகிறார்கள்.  அப்படின்னா என்னன்னு பார்ப்போம்.  இப்போ இத்தனை நாழி நாயகி பாவம்ன்னு பார்த்ததெல்லாம் பிரேமப் பேச்சுன்னு பார்த்தோமோல்லையோ?  எல்லாத்துக்குமே உள்ளுறைப் பொருள் உண்டு.  உள்ளுறைப் பொருள்ன்னா ‘ஸ்வாபதேசம்’ன்னு சம்ப்ரதாயத்திலே சொல்லுவா.  மேலெழுந்தவாரியாப் பார்த்தா ஒரு அர்த்தம்.  ஆனா அதுக்கு உள்ளூர பார்த்தோம்ன்னா ஆத்ம, பரமாத்ம விஷயமா ஒரு அர்த்தம்.

    தோழிப்பாசுரம், தாய்ப்பாசுரம், மகள்ப் பாசுரம்ன்னு பார்த்தோமோல்லையோ?  இதிலே மகள் எப்போ பாடுவள்?  விரகத்திலே பாடுவள்.  உடனே நாயகனை அடைஞ்சுதான் தீர வேண்டும்ங்கிற துடிப்பு இருந்தா மகள் பாடப் போறா.  தாயார் என்ன சொல்லுவள்?  மகளே, இது உனக்கு ஆகாது.  எந்தத் தாயாராயிருந்தாலும் அதுதானே சொல்லப்போறா?  இது எப்போ துடிக்கும் போதும், மகளே இது என்னத்துக்கு உனக்கு?  அவசரப்படாதே, ஆறியிரு, தானே நல்ல கல்யாணமா நடக்கும்.  இது அவள் சொல்லப் போறா.  தோழி என்ன பண்ணுவள்?  நாயகனும், நாயகியும் சந்திக்கறதுக்கு ஏற்பாடு பண்றதே அவதான்.  இது தோழியினுடைய வேலை.  அப்போ தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம்.  மகள், பகவானை அடைந்தே ஆகவேண்டும்ங்கிற பதற்றப்படுமவள்.  தோழி, பகவானை சந்திப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வைக்குமவள்.  தாயார், ஆறியிரு, அவசரப்படாதேன்னு சமாதானம் சொல்லுபவள்.  இந்த மூன்று பாசுரத்தையும் நாம இப்போ நம்மாழ்வார் பாசுரத்திலேயே பார்த்துடலாம்.  இதுக்கு 27 திருவாய்மொழிகள் பாடினார்.  மொத்தம் 100ன்னு பார்த்தோம்.  அந்த 100க்குள்ளே, 27 பதிகங்கள், ஒரு பதிகம்ங்கிறது ஒரு திருவாய்மொழி, ஒரு பதிகம்ங்கிறது 11 பாசுரம்.  அதிலே 27 பதிகங்களாலே ஆழ்வார் நாயகி பாவத்தோடேயே பாடியிருக்கார்.  அதிலே 3, தோழிப் பாசுரத்துக்காக.  7, தாய்ப் பாசுரத்துக்காக.  17, மகள் பாசுரத்துக்காக.  மொத்தம் 27 பதிகங்கள் பெண் பாவனையிலே பாடினார்.  73 பதிகங்கள் ஆண் பாவனையிலே பாடினார்.

    இது என்ன பெரியோர்களெல்லாம் சொல்லியிருக்கான்னா, இது வெறும் நாயகி பாவம் அல்ல.  ‘சம்பந்த, உபாய, பலங்களில், உணர்த்தி, துணிவு, பதற்றமாகிற ப்ரக்ஞாவஸ்தைகளுக்கு, தோழி, தாயார், மகள் என்று பேர்’.  இது சூத்திரம்.  தோழி, தாயார், மகள் – இந்த மூன்றுமே ஆழ்வாரினுடைய அறிவின் வெவ்வேறு அவஸ்தை.  ஆழ்வார் ஒருத்தர்தான், அவர் ஆள் மாறிடப் போறதில்லே இப்போ.  அப்போ மனசு மட்டும்தானே மாறது.  தன்னுடைய நினைவு என்னவோ, நினைவின் மாறுதலாலே தன்னையே நாயகியா நினைச்சுக்கறார்.  அந்த மாதிரி நினைச்சுனுட முடியுமான்னு நமக்குத் தோணும்.  இதுல ஒரு முக்கியமான உண்மை புரிஞ்சு போச்சுன்னா ஆழ்வார்களாலே எப்படி முடியறதுன்னு புரிஞ்சுனுடலாம்.  வேதாந்தம் என்ன சொல்லுகிறதுன்னா, ஸ்ரீமந் நாராயணன் ஒருத்தர்தான் புருஷன்.  அவனைத் தவிர மத்த ஆத்மாக்கள் அத்தனை பேரும் ஸ்திரீகள்தான்.  ஆத்மாக்கள் அத்தனை பேரும் பத்தினிகள், புருஷோத்தமன் ஒருத்தன்தான் பர்த்தா.  இதுனாலதான் எப்போ கல்யாணம் பண்ணிக் குடுக்கறாச்சேவும் மந்த்ரத்திலே என்ன தெரியுமா ஆரம்பிப்பா?  இந்தப் பிள்ளை பேரச் சொல்லியே குடுக்க மாட்டார்.  மாமனார் பொண்ணைக் குடுக்கறச்சேவே, விஷ்ணு ரூபாய வராய, விஷ்ணு ரூபத்தில இருக்கற இந்த வரனுக்கு என் பெண்ணைக் குடுக்கிறேன்.  ஒருத்தர் வேடிக்கையாச் சொன்னார், இல்லேன்னா இந்தப் பிள்ளையைப் பார்த்தா யார் பொண்ணு குடுப்பா இப்போ.  ஏதோ விஷ்ணு உட்கார்ந்திருக்கார்ங்கிற நம்பிக்கையிலதான் பொண்ணையே மாமனார் பண்ணிக் குடுக்கிறார் இப்போ.  விஷ்ணுவே இங்க இருப்பராம்.  இந்தப் பிள்ளை ரூபத்தில இருந்து விஷ்ணு கல்யாணம் பண்ணிக்கனுமாம்.  ஏன்னா கல்யாணம்ங்கிறதே விஷ்ணுதான் பண்ணிக்கனும்.  திவ்யதேசத்திலெல்லாம் ‘நித்ய கல்யாணப் பெருமாள்’ன்னு கேள்விப்பட்டிருக்கீளோல்லையோ?  அதைப் போலே எந்த ஆத்மாவா இருந்தாலும், விஷ்ணுவுக்குத்தான் பத்தினி.  அப்போ மொத்தப் பேருமே பெண்தான்.  நமக்குப் பெண் தன்மைங்கிறது புதுசு அல்ல.  சரீரத்திலே சில பேர் பெண் தன்மையோடு இருக்கலாம், சில பேர் ஆண் தன்மையோடு இருக்கலாம்.  ஆனா ஆத்மான்னு பார்த்தா மொத்தப் பேருமே பெண்தான்.  இந்த ப்ரக்ஞை ஆழ்வாருக்கு வந்துடுத்து, நமக்கு வரலை.  அவ்வளவுதான் சொல்லணுமே தவிர, அவருக்கு அந்த உண்மை புரிஞ்சு போய்ட்டபடியால தன்னை நிஜமாகவே பெண்ணா நினைச்சுனுட்டார்.  நமக்கு அந்த உண்மை புரியாததால நாம என்னமோ ஆண், அப்படின்னு நினைச்சிண்டு நாம வாழ்ந்துண்டிருக்கோம்.

    அப்போ பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கு உள்ள தொடர்பைத்தான் இந்த இடத்தில பார்க்கப் போறோம்.  அதிலயே எப்படித் தாயார், எப்படி மகள், எப்படி தோழின்னு பார்க்கணும்.  ’சம்பந்த, உபாய, பலங்களில், உணர்த்தி, துணிவு, பதற்றமாகிற ப்ரக்ஞாவஸ்தைகளுக்கு, தோழி, தாயார், மகள் என்று பேர்’ப்ரக்ஞா – நம்முடைய சிந்தனா, ஸ்மிருதி, நினைவு, ஞானம் இதுக்குத்தான் ப்ரக்ஞான்னு பேர்.  ஆழ்வாருடைய வெவ்வேற ப்ரக்ஞைகள், ஆழ்வாருடைய வெவ்வேற தசைகள், வெவ்வேற நினைவின் ஓட்டங்கள், அந்த நினைவு வரச்சேவெல்லாம் தான் அவராகவே நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில ஏதோ ஒரு நினைவு முதிர்றது, மகளா நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில வேற ஏதோ ஒரு நினைவு முதிர்ச்சி அடைகிறது, தாயா நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில வேற ஏதோ ஒரு நினைவு முதிர்ச்சி அடைகிறது, தோழியா நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில வேற ஏதோ ஒரு நினைவு ஏற்படுகிறது, ஆணாகவே பாடிடுறார்.  ஆக மொத்தத்தில நினைவின் மாறுதலாலேதான் வெவ்வேற தசைகளை அவர் அடைகிறார்.  அந்த மாதிரிகூட முடியுமான்னு கேட்டா, இப்போ நான் இருக்கேன்னு வச்சுக்கங்கோ.  என்னைப் ‘பிள்ளை’ன்னு சொல்லிக்கலாமா?  எங்க அப்பாவுக்கு நான் பிள்ளைங்கறதாலே.  என்னைத் ‘தகப்பன்’னு சொல்லிக்கலாமா?  என் பிள்ளைக்கு நான் தகப்பன்ங்கிறதாலே.  என்னைக் ‘கணவன்’னு சொல்லலாமா?  என் மனைவிக்கு நான் கணவனானபடியாலே.  அப்போ நாயகன் மூணு பேரா?  நான் ஒருத்தனா, இல்ல மூணு பேரா இப்போ?  நான் மூணு பேரில்லே, ஒருத்தன்தான்.  ஆனா இந்த மனைவியோடே சம்பந்தப்படுத்தி பார்க்கறச்சே நான் பர்த்தா.  பிள்ளையோடே சம்பந்தப்படுத்திப் பார்க்கறச்சே நான் தகப்பன்.  தகப்பனோட சம்பந்தப்படுத்திப் பார்க்கறச்சே நான் பிள்ளை.  அப்போ என்னுடைய நினைவிலேயே என்னால மூணா இருக்க முடியறதோல்லையோ?  இது எல்லாமே ப்ரக்ஞையின் மாறுதல்கள்.  அதைப்போல நம்மாழ்வாருக்கும் மூணு ப்ரக்ஞை ஏற்படறது.

    நீங்க திருமந்திரம்ன்னு கேள்விப் பட்டிருப்பீள்.  ‘ஓம் நமோ நாராயணாய’ங்கிற எட்டெழுத்து இருக்கோல்லையோ, ஆச்சார்யனிடத்திலே சமாஸ்ரயணம் பண்ணிக் கொண்டு, பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிக்கொள்ளும் போது, ஆச்சார்யன் சொல்லிக் குடுக்கறது அது.  அதிலே மூன்று பதங்கள் இருக்கா?  ஓம், நமஹா, நாராயணாய, அப்படின்னு மூன்று பதங்கள்.  இது மொத்தம் எட்டெழுத்து.  ஓம்ங்கிறது ஓரெழுத்து. நமஹாங்கிறது ரெண்டெழுத்து.  நாராயாணாயங்கிறது ஐந்தெழுத்து.  இதிலே முதல் பதத்தை வாசிக்கறச்சே நமக்கு ஒரு அறிவு வரும்.  ரெண்டாம் பதத்தை வாசிக்கறச்சே ஒரு அறிவு வரும்.  மூன்றாம் பதத்தை வாசிக்கறச்சே ஒரு அறிவு வரும்.  ஆழ்வாருக்கு என்ன ஆச்சர்யம் தெரியுமா?  முதல் பதமான ’ஓம்’மை வாசிக்கறச்சே அவருக்குத் தோழியாத் தோணிடும்.  ‘நமஹா’ங்கிற ரெண்டாம் பதத்தை வாசிக்கறச்சே தாயாகப் பாடிடுவர்.  ‘நாராயணாய’ங்கிற மூன்றாம் பதத்தின் அர்த்தம் தெரியறச்சே மகளாப் பாடிடுவர்.

    என்ன ஸ்வாமி, எங்கயோ சம்பந்தமில்லாத.  இத்தனை நாழி ஏதோ தோழி, தாயார், மகள்ன்னு நாயகி பாவம் பார்த்திண்டிருந்தோம்.  திருமந்திரத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இப்போ?  அது வெறும் ஞானமான்னா இருக்கும் திருமந்திரம்?  இது ப்ரேமமாச்சேன்னா.  ஞானம் முற்றினாத்தான் ப்ரேமம்ன்னு முதல்லயே சொல்லியிருக்கேன்.  ஞானமும் உண்டு, ப்ரேமமும் உண்டு.  ‘ஓம்’ங்கிற அர்த்தத்தில நாம என்ன புரிஞ்சுக்குறோம்ன்னா, பகவானுக்கும் நமக்கும் உண்டான சம்பந்தம் தெரியும்.  அவருக்கும் நமக்கும் நெருங்கின சம்பந்தம் உண்டான்னா, நெருங்கின இல்லே.  அவரில்லாம நாம இல்லே, நாம இல்லாம அவர் இல்லே.  நம்ம ஒரோருத்தருக்குள்ளேயும் பெருமான் நீக்கமற நிறைந்திருக்கிறானோல்லையோ?  அந்த அளவுக்கு பெருமானுக்கும் நமக்கும் நெருங்கின தொடர்பு உண்டு.  அதனாலே இந்த இடத்திலே, அவனுக்கும் நமக்கும் உண்டான சம்பந்தத்தை ஆழ்வார் அவ்வப்போது தெரிந்து கொள்ளுகிறார். 

    ஓம்காரத்திலே யாருக்கும், யாருக்கும் உண்டான சம்பந்தம் தெரியும்ன்னால், ‘அ’காரத்துக்கும், ‘ம’காரத்துக்கும் உண்டான சம்பந்தம் தோன்றும்.  ஓம் என்பதை நீங்கள் பிரித்தால், ‘அ’, ‘உ’, ‘ம’ என்று மூன்றாகப் பிரியும்.  அ, உ சேர்ந்ததுன்னால், ‘ஓ’ என்று ஆகும்.  ‘ம’ சேர்ந்ததுன்னால், ‘ஓம்’ என்று ஆகும்.  இதிலே ‘அ’ என்பது பரமாத்மாவைக் குறிக்கும்.  ‘ம’ என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.  ‘அ’வுக்கும், ‘ம’வுக்கு உண்டான சம்பந்தம், இந்த சம்பந்தத்தைத்தான் ஓம்காரமே சொல்லும்.  பகவானுக்கும் ஜீவாத்மாவுக்கும் உண்டான சம்பந்தத்தை ‘ஓம்’ங்கிற பிரணவம் சொல்லிடும்.

    அடுத்து, ’நமஹா’ – மஹா, ம், ந, மம.  சம்ஸ்கிருதத்திலே அஸ்மத் சப்தம்ன்னு பேர்.  அஸ்மத் சப்தத்திலே, அகம் ஆவாம்யயம், நான் என்னைப்பற்றி சொல்லிக் கொள்ளுவது.  ’மஹா’ன்னு சொன்னா ‘என்னுடையது’ன்னு அர்த்தம்.  ‘மம’ன்னு சொன்னாலோ, ‘மஹா’ன்னு சொன்னாலோ, ‘என்னுடையது’.  ம் – நான், ந – அல்லேன்.  நான் என்னுடையவன் அல்லேன்.  நான் பகவானுடையவன், இப்படிங்கிற ஞானத்துக்காக ஏற்பட்டதுதான் ‘நமஹா’.  அப்போ நமஹாங்கிற சப்தத்திலே இருந்து நாம தெரிஞ்சுக்கறது, நான் என்னுடையவன் அல்லேன், அவருடையவன்.  அவர் பார்த்து எப்போ இரட்சிக்கிறாரோ அப்போ இரட்சிக்கட்டும், இப்படி இருக்கறது நமஹாங்கிற சப்தத்தினுடைய அர்த்தம்.

    நாராயணாய-ன்னு சொல்றது, நான் நாராயணனுக்கு உரியவன்.  எல்லா நேரத்திலேயும், எல்லா காலத்திலேயும் அவருக்குக் கைங்கர்யம் பண்ணிண்டே இருக்கணும்.  இது நாராயணாயங்கிற சப்தத்தினுடைய அர்த்தம்.

    அப்போ பெருமானுக்கும் எனக்கும் சம்பந்தம் உண்டுன்னு பிரணவத்தில தெரிஞ்சிண்டோம்.  அவர்தான் என்னை இரட்சிக்கணும், நானா முயற்சி எடுக்க வேண்டிய தேவை இல்லே, இது நமஹாங்கிற சப்தத்திலே இருந்து தெரிஞ்சிண்டோம்.  நான் அவரை அடைஞ்சு அனுபவிக்கணும், கைங்கர்யம் பண்ணனும், இதை நாராயணாயங்கிறதில இருந்து தெரிஞ்சிண்டோம்.  இப்போ இந்த மூன்று நிலைகள்தான் ஆழ்வாருக்கு மூன்று பாவனை.  பெருமானுக்கும் தனக்கும் இருக்கிற சம்பந்தம் ஞாபகம் வந்தால், தோழியாகப் பாடிடுவர்.  பெருமானேதான் இரட்சிக்கணும், நாம பண்றதுக்கு ஒன்னுமில்லேங்கற நம்பிக்கை வந்தால், தாயாரா பாடிடுவர்.  பெருமானை உடனடியா அடைஞ்சு அனுபவிக்கணும்ன்னு இருந்தா, மகளாப் பாடிடுவர்.  அப்போ திருமந்திரத்தில இருக்கற மூன்று பதங்கள், அதைப்பற்றின ஞானம் எப்பப்போ ஆழ்வாருக்கு ஏற்படறதோ, அதற்கேற்றாப்போலே இந்த மூன்று பாவனைகள்.  இப்போ சம்பந்த ஞானம் ஓம்காரத்திலே இருந்து வருதாதோழி என்ன பண்ணுவள்ன்னு சொன்னேன்?  நாயகியும், நாயகனும் சந்திக்கறதுக்கு அவள்தானே ஏற்பாடு பண்ணிக் குடுக்கிறா?  உனக்கும், அவனுக்கும்தான் தொடர்புன்னு அவள்தானே சொல்லிக் குடுக்கிறா?  அப்போ அந்த பாசுரமா ஆழ்வார் பாட ஆரம்பிச்சுருவர்.  ஓம்காரத்திலெ பெருமானுக்கும், நமக்கும் இருக்கிற சம்பந்தம் இருக்கு.  ஆழ்வாருக்கு அது ஞாபகம் வரச்சே, சந்திக்கணும்ன்னு தோன்றது.  சந்திக்கறதுக்கு ஏற்பாடு பண்ற தோழியாப் பாடிடுவர்.  அடுத்து ‘நமஹா’ங்கிறது நன்னா மனசுல பட்டா, நாம போகவே கூடாதே, ஆறித்தானே இருக்கணும், அடங்கித்தானே இருக்கணும்ன்னா, தாயார் இதைத்தானே சொல்லிண்டிருக்கா.  பெண்ணே நீ போகாதே, வீட்டோட இரு, இருன்னு சொல்லிண்டிருக்காளோல்லையோ?  அப்போ இந்த நமஹா சப்தத்தினுடைய அர்த்தம் பட்டா, தாய்ப்பாசுரமாப் பாடிடுவர்.  அதே நாராயணாயங்கிற சப்தத்திலே, இப்போ பகவானை அடைஞ்சுடனும், அனுபவிக்கனும், இது நாராயணாய சப்தத்துக்கு அர்த்தமோல்லையோ?  இதுதான் மகள்ப் பாசுரம்.  அவளைப் பொறுத்தவரைக்கும் வீட்டோட இருக்கறதெல்லாம் பிடிக்காது.  என்னமோ, இப்பவே நாயகனை அடைஞ்சுடனும்ன்னு துடிக்கிறாளோல்லையோ?  அது மகள் பாசுரத்திலே. இதுனாலதான், சம்பந்தத்திலும் உபாயத்திலும் பலத்திலும் உணர்த்தி, துணிவு, பதற்றம் – சம்பந்த ஞானம் உணர்ந்துட்டார்ன்னால், தோழியாப் பாடறார்.  பகவானே உபாயம், நாம பண்றதுக்கு ஒன்னுமில்லேன்னு துணிஞ்சுட்டார்ன்னா, தாயாராப் பாடிடுவர்.  அதே அவன் கிடைப்பனோ, கிடைப்பனோன்னு துடிச்சார்ன்னா, மகளாகப் பாடுகிறார்.  இந்த மூன்று நிலைகள் ஆழ்வாருக்கே இருக்கிற பேதம், அவஸ்தா பேதம்.  அப்போ ஆண், ஞானத்தோடே பேசிருவர்.  பெண் பிரேமத்தோடே பேசுவர்.  அப்போ உள்ளுறைப் பொருளுண்டோன்னு கேட்டால், இந்தத் திருமந்திரத்தினுடைய அர்த்தம் அவர் மனசிலே படப்பட, அதுக்குத் தகுந்தாற்போலே மூன்று நிலைமையோடே ஆழ்வார் பாடுகிறார்.

    இதிலே தூதுவிடறது எது என்றால், தன் பக்கத்திலே இருக்கிற ஏதோ ஒரு பட்சியைப் பிடிப்பர்.  நீ போய் பகவானிடத்திலே நான் இருக்கேன்னு சொல்லுன்னு தூது விட்டுடுவர்.  இதுக்குன்னு நான்கு பதிகங்கள் பாடினார்.

    அஞ்சிறைய மட நாராய்! * அளியத்தாய்! * நீயும் நின்
    அஞ்சிறைய சேவலுமாய் * ஆவா என்றெனக்கருளி *
    வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு * என் விடு தூதாய்ச் சென்றக்கால் *
    வன்சிறையில் அவன் வைக்கில் * வைப்புண்டால் என்செய்யுமோ

    (திருவாய்மொழி 1.4.1)

    முதல் பத்து, நான்காம் திருவாய்மொழி, முதல் பாசுரத்திலே, பக்கத்திலே இருந்தது ஒரு நாரை.  நாரை, கொக்கு, வண்டு, மகன்றில், குருகு, இதைப்போல நிறைய பறவைப் பேர் வரும்.  ஆழ்வார்கள் அவதாரத்தாலே பட்சி ஜாதிக்கே பெருமைன்னு வச்சுக்கலாம்.  ஏன்னா அடிக்கடி அவா பேசிட்டாளோல்லையோ?  இது என்ன நம்ம பூர்வர்கள் எழுதி வைச்சுருக்காள்ன்னா, இராமாவதாரத்தாலே குரங்கு ஜாதிக்கு ஏற்றம், ஆழ்வார்கள் அவதாரத்தாலே பட்சி ஜாதிக்கு ஏற்றம்.  ஏன்னா அங்கேயும் இராமன் குரங்கைத்தானே தூதா விட்டார்?  ஆழ்வார்களும் பறவையைத்தானே தூதா விடறா?  தூது விடுவதுங்கிறது என்ன?  அதுக்கு ஒரு உள்ளுறைப் பொருள் இருக்கு.  தூது விடுவதுங்கிறது நாம போய் ஆச்சார்யன் திருவடிகள்ல விழுவதுதான் தூதுவிடுதல்.  ஏன்னா இந்தப் பறவை போய் நம்மைப் பற்றி பகவானிடத்தில சொல்லப் போறதுன்னுதானே நாயகிக்கு எண்ணம்?  ஆச்சார்யன்தானே நம்மைப் பற்றி பகவானிடத்திலே சொல்லப் போறார்?  எதுக்கு சமாஸ்ரயணம்ன்னு போறோம்?  என்னைப் பற்றி பெருமானிடத்திலே விண்ணப்பியும்ன்னு சொல்றதுக்குத்தானே?  அப்போ அந்தப் பட்சியேதான் ஆச்சார்யன்.  அந்த ஆச்சார்யன் கால்லே விழறதைத்தான் பட்சி கால்ல விழறார். 

    பட்சி அப்பப்போ ஆழ்வாருக்கு பக்கத்திலே வந்ததுன்னா நீ போய் பகவானிடத்திலே சொல்லுன்னு தூது விட்டுடுவர்.  என்ன சொல்ல வேணும், அவரை எப்படி அடையாளம் தெரிஞ்சிக்கணும், அங்க ஒரே கூட்டமா இருக்குமே, எனக்கு பயமாயிருக்கேன்னு பட்சி சொல்லும்.  அப்போ இவர் அடையாளம் எல்லாம் சொல்லி அனுப்புவர்.  சங்கு சக்கரம் யார் பிடிச்சிண்டிருக்காரோ, அவர்கிட்ட போய்ச் சொல்லு.  வேற யார்கிட்டயாவது போய்ச் சொல்லிடாதே.  யார் திருமார்பிலே துளசி மணிமாலை தரிச்சிண்டிருக்காரோ, யார் சங்க சக்கரம் பிடிச்சிண்டிருக்காரோ, அவரிடத்திலே நான் சொன்னேன்னு போய்ச் சொல்லு.  பறவை உடனே கேட்கும், என்ன சொல்லணும்?  என்ன சொல்லணுமா, நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம், பராங்குச நாயகின்னு ஒரு வார்த்தை சொல்லு.  அப்புறம் அவர் இருக்காரான்னு பார் அங்கே.  உடனுக்குடன் உன்னோடே கிளம்பி வர ஆரம்பிச்சுருவர்.  ஆழ்வார் நம்மை விட்டு சிரமப்படறாராமே, நான் உடனே வரேன்னு கிளம்பிடுவர்.  பறவைக்கு சந்தேகம், என்னைப் பிடிச்சு சிறையில போட்டுட்டா?  ஏற்கனவே ஹனுமார் இப்படித்தான் போய், வால்லே நெருப்போடே வந்து சேர்ந்தார்.  நீர் என்னைத் தூது விடறீர், நான் போய் என்ன ஆயிடுமோன்னு இந்தப் பறவைக்குக் கவலை.  ஆழ்வார் சொன்னார், ‘வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யும்’ – அவன் கொஞ்ச நாள் சிறையில வச்சுட்டாத்தான், எனக்காக இரேன்.  நான் சீதையாப் பிறந்துருக்கச்சே இருக்கலே?  தேவஸ்தீரிகள் எல்லாரையும் இரட்சிக்கறதுக்காக, தேவர்கள் கஷ்டப்படறாளே, இராட்சசர்கள் துன்புறுத்துராளே, அவர்களை முடிக்கணும்ங்கிறதுக்குத்தானே நான் போய் பத்து மாசம் சிறையில இருந்தேன்.  நம்மாழ்வார் தன்னையே சீதையா நினைச்சிண்டு சொல்லிக்கறார் இப்போ, நானே சிறையில இருந்தேனே அசோகவனத்திலே.  எனக்காக நீ இருந்தா என்னன்னு இந்தப் பறவையைக் கேட்கறார்.  அப்புறம் ஆழ்வார் பாட்டில கொஞ்சம் நிதானமாப் பார்த்தோம்ன்னால், ‘என் விடு தூதாய் சென்னக்கால் வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யும்’,  என் விடு தூதாய் – நான் தூது விடறேன், நீ போறே, ஞாபகம் வச்சுக்கோன்னார்.  தெரியுமே, நீர்தான் தூது விடறீர்.  அதுல சந்தேகமில்லையேன்னா, இல்லே.  இராமனும் ஹனுமாரைத் தூது விட்டான், சீதையும் ஹனுமாரைத் தூதுவிட்டாளோல்லையோ?  அதே ஹனுமானை சீதையும் இராமனிடத்திலே அனுப்பிச்சாளே?  இராமனிடத்திலேர்ந்து ஹனுமார் அக்கரைக்குப் போனார், சீதையினிடத்திலேர்ந்து ஹனுமார் இக்கரைக்கு வந்துட்டார்.  இதுல இராம தூதனாப் போறச்சேவும் ஒரு பரிசு கிடைச்சது.  சீதா தூதனா வரச்சேவும் பரிசு கிடைச்சது.  இராம தூதனா போறச்சே, வாலில் நெருப்பு பரிசு.  இதான் கிடைச்சது.  சீதா தூதனா திரும்பி வரச்சே, திரும்பி வந்த ஹனுமானைப் பார்த்து அணைத்துக் கொண்டு, இதைவிட நான் உனக்குக் குடுக்கறதுக்கு ஒன்றுமில்லே என்று இராமன் நன்றி தெரிவித்தானோல்லையோ?  ஆழ்வார் ஞாபகப்படுத்தறார், சீதா தூதனாப் போறச்சே இராமன் ஆலிங்கனம் கிடைச்சது.  இராம தூதனா போறச்சே வாலில் நெருப்புக் கிடைச்சது, ஞாபகம் இருக்கோல்லையோ?  என் விடு தூதாய் சென்னக்கால், இப்போ நீ போறது பராங்குச நாயகியின் தூதாக.  ஒன்னும் ஆகாது உனக்கு.  உனக்கு பகவான் பார்த்து, சத்காரம் பண்ணி, உன்னை உட்கார்த்தி வைச்சு மரியாதை பண்ணித்தான் பேசுவனே தவிர, ஏன்னா அனுப்பிச்சுருக்கற அதிகாரி அப்படிப்பட்டவர்ன்னு புரிந்து கொள்.  யாரோ உன்னை அனுப்பலே, நாயகி பாவத்தில தலை சிறந்திருக்கற ஆழ்வார் உன்னை அனுப்பிச்சுருக்கார், அதனாலே உனக்கு ஒண்ணும் ஆகாது, போ.

    நேரே இங்கேர்ந்து நாரை கிளம்பிப் போச்சு.  பெருமாளைப் பிடிச்சுடுத்து. பிடிச்சு அவன்கிட்ட விஷயத்தைச் சொல்லணுமோல்லையோ?  என்ன சொல்லணும்ன்னு ஆழ்வார்கிட்ட கேட்டு வச்சிருந்தது.

    நல்கித் தான் காத்தளிக்கும் * பொழில் ஏழும் வினையேற்கே *
    நல்கத் தான் ஆகாதோ * நாரணனைக் கண்டக்கால் *
    மல்கு நீர்ப் புனல் படப்பை * இரை தேர் வண் சிறு குருகே! *
    மல்கு நீர்க் கண்ணேற்கோர் * வாசகம் கொண்டருளாயே

    (திருவாய்மொழி – 1.4.5)

    அந்தப் பொண்ணு அழுதுண்டே இருக்கான்னு போய் ஒரு வார்த்தை சொல்லு.  நீ வேற ஒன்னும் சொல்ல வேண்டாம் என்னைப் பத்தி.  சொல்லிட்டா கிளம்பி வந்துருவரா?  நீ அழுதுண்டே இருக்க வேண்டியதுதான்.  அவர் வருவரா?  நித்ய சூரிகளுக்கு நாயகன், இந்திரனுக்கெல்லாம் இந்திரன், எத்தனை பேர் இருக்கப் போறாளோ, என்னை உள்ள விடுவாளோ, மாட்டாளோ?  யாருன்னே எனக்குத் தெரியலையே, நிக்கறதுக்கே எனக்குப் பயமாயிருக்கே, இத்தனையும் அந்த நாரை சொல்லித்து.  போயேன், நான் சொன்னேன்னு ஒரு வார்த்தை சொல்.

    அருளாத நீர் அருளி * அவர் ஆவி துவராமுன் *
    அருள் ஆழி புட்கடவீர் * அவர் வீதி ஒருநாள் என்று *
    அருள் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி *
    அருள் ஆழி வரி வண்டே! * யாமும் என் பிழைத்தோமே

    (திருவாய்மொழி – 1.4.6)

    சட்டுன்னு வண்டுக்கு மாறிடுவர்.  நாரையைத் தூது விட்டுண்டு இருப்பர்.  மகன்றில் பட்சி, குருகு, வண்டு, ஓரோரு பறவையாக அந்தப் பத்துப் பாசுரத்துக்குள்ள தூது விட்டார்.  நான் போய் பகவான்கிட்ட என்ன சொல்லணும்?  உடனடியா ஆழ்வார் கோவில் வாசலுக்கு வா.  ஆழ்வாருக்கு நீ கருட வாகனத்தோட சேவை சாதிக்கணுமாம்.  உடனே வரச்சொன்னார்ன்னு சொல்லச் சொன்னார்.  போச்சு வண்டு.  போய் பெருமான் முன்னாடி நின்னுண்டு, நான் பராங்குச நாயகி அனுப்பிச்சு வந்திருக்கேன்.  நீர் உடனடியா வாரும், அப்படின்னு சொல்லித்து வண்டு.  பெருமான் பார்த்தார், அவருக்குத் தெரிஞ்சு போச்சு.  இந்த வண்டு வந்ததுன்ன உடனே, கூட்டமா எல்லா தேவர்கள், நித்ய சூரிகளெல்லாம் இருந்தாளோல்லையோ, அங்கேர்ந்து வந்து, ‘நீர் உலகத்தையெல்லாம் இரட்சிக்கிறவராமே, ஆனா ஒருத்தியை மட்டும் இரட்சிக்காம விட்டுருக்கீறாமே?  அதைத்தான் பராங்குச நாயகி சொல்லிட்டு வரச்சொன்னாள்ன்னு சத்தம் போட்டு பேசிச்சு இது.  பெருமான் கிட்டக்க வந்து, ஏன் சத்தம் போடறே, கிட்டக்க வா.  யாரும் சத்தம் போட்டா எனக்குப் பிடிக்காது.  ஏன், போட்டா என்னனுட்டா, அப்போ ஒருத்தனை மட்டும் இரட்சிக்கலேன்னா பேர் தங்குமா?  உலகத்த அத்தனையும் இரட்சித்தாத்தான் நாராயணன்னு பேர்.  உலகத்துல ஒருத்தனை மட்டும் விட்டுட்டு, மத்த எல்லாரையும் இரட்சிச்சா நாராயணன்ங்கிற பேர் இருக்குமோ?  அதைத்தான் இரகசியம் சொல்லி அனுப்பிச்சிருந்தார் ஆழ்வார்.  நீ போய் ஒரே ஒரு கேள்வி கேளு, நாராயணன்ங்கிற பேர் அவனுக்கு வேணும்ன்னா உடனடியா வரச்சொல்லு.  வேண்டாம்ன்னா விட்டுடச் சொல்லு.  இந்த இரகசியத்தைப் போய் அந்த வண்டு பேசிடுத்து.  உமக்கு நாராயணன்னு பேராமே, ஆனா ஆழ்வாரை இன்னும் நீ இரட்சிக்கலையாமே?ன்ன உடனே, சத்தம் போடாதே, உன்னோட வரேன், வா, அப்படின்னு பெருமான் உடனே கிளம்பி வந்துட்டார்ன்னுதான் வியாக்யாதார் தெரிவிக்கிறார்.  ஆக தூதுவிட்டாலும் ஆழ்வார் தூது விடுவது ஸ்ரீதேவி நாச்சியாரே தூதுவிட்டார்ப்போலே.  தன்னையே சீதையாக நினைத்துக் கொண்டுதான் ‘அஞ்சறை மட நாரை’யிலே தூது விடுகிறார் ஆழ்வார்.  இது முதல் பத்திலே நான்காம் திருவாய்மொழியில் நாயகி பாவத்திலே பராங்குச நாயகி பாடினது.

    (தொடரும்)

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)

    Comments

    Please wait...
    Sorry, the comment you entered is too long. Please shorten it.
    You didn't enter anything. Please try again.
    Sorry, we can't add your comment right now. Please try again later.
    To add a comment, you need permission from your parent. Ask for permission
    Your parent has turned off comments.
    Sorry, we can't delete your comment right now. Please try again later.
    You've exceeded the maximum number of comments that can be left in one day. Please try again in 24 hours.
    Your account has had the ability to leave comments disabled because our systems indicate that you may be spamming other users. If you believe that your account has been disabled in error please contact Windows Live support.
    Complete the security check below to finish leaving your comment.
    The characters you type in the security check must match the characters in the picture or audio.

    To add a comment, sign in with your Windows Live ID (if you use Hotmail, Messenger, or Xbox LIVE, you have a Windows Live ID). Sign in


    Don't have a Windows Live ID? Sign up

    Trackbacks

    The trackback URL for this entry is:
    http://kaatru.spaces.live.com/blog/cns!8A3636B33FA87F5E!747.trak
    Weblogs that reference this entry
    • None