sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Kaatru (the wind)

"Naaraayananey Namakkey Parai Tharuvaan"
September 17

திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார்களிலே கடைசியாக அவதரித்தவர் திருமங்கையாழ்வார்.  ’கலியன்’ என்பது அவருடைய இயற்பெயர்.  ’நீலன்’, அப்படிங்கறது தாயார், தகப்பனார் வைத்த பெயர்.  ஆனால் பகவானாலே கலியன் என்று, மிடுக்குப் படைத்தவர், சக்தி படைத்தவர் என்று பெயர் சூட்டப்பட்டார்.  இவர் பாடிய திவ்யப்ரபந்தங்கள் ஆறுகார்த்திகை மாசம், கார்த்திகை நட்சத்திரத்திலே திருமங்கையாழ்வார் சீர்காழிக்கு அருகிலே திருக்குறையலூர்ங்கிற திவ்யதேசத்தில் அவதரித்தார்.  இவர் நம்மாழ்வாருடைய நான்கு பிரபந்தங்களுக்கு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களைப் பாடினார்.  வேதங்கள் நாலு, ரிக், யஜுஸ், சாம, அதர்வங்கள்.  இந்த நான்கு வேதங்களுக்குச் சமமாக நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்களைப் பாடினார், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.  வேதங்களுக்கு அங்கங்கள் ஆறு.  शिक्षा (சிக்‌ஷா), व्याकरणं (வ்யாகரணம்), चन्थ: (சந்தஹா), निरुक्थं (நிருக்தம்), जोथिषं (ஜோதிஷம்), कल्पं (கல்பம்). என்று அந்த ஆறு அங்கங்களுக்குப் பேர்.  இந்த ஒன்றொன்றும் நமக்கு ஓரொரு படிப்பு சொல்லிக் கொடுக்கும்.  இந்த ஆறு அங்கங்களுக்குச் சமமாகத்தான் ஆறு பிரபந்தங்களை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.  அப்போ அங்கிகளான வேதங்களாக நம்மாழ்வாரும், வேத அங்கங்களான ஆறை திருமங்கையாழ்வாரும், இப்படி அங்கம், அங்கிங்கற பாவத்திலே பாடியுள்ளார்கள்.  திருமங்கையாழ்வார் பாடிய பிரபந்தங்களிலே முதல்ல பாடப்பட்டது ‘பெரிய திருமொழி’அடுத்துப் பாடப்பட்டது, திருக்குறுந்தாண்டகம்.  மேலே, திருஎழுகூற்றிருக்கை பாடினார்.  அடுத்து சிறிய திருமடல், பெரிய திருமடல்கடைசியாக திருநெடுந்தாண்டகம் பாடினார்.  இந்த வரிசையில்தான் திருமங்கையாழ்வார் பாடியிருக்கார்.  அப்போ ஆழ்வார்களிலே கடைசி, திருமங்கையாழ்வார்.  அவர் பாடின பிரபந்தங்களிலே கடைசி, திருநெடுந்தாண்டகம்.  அப்போ நாலாயிரம் திவ்யப் பிரப்ந்தங்களிலே காலக்கிரமத்தில் கடைசி பிரபந்தம் என்று பார்த்தால் திருநெடுந்தாண்டகம்தான்.  எது முதல்வதாக இருக்கும்? பொய்கையாழ்வாருடைய ’முதல் திருவந்தாதி’தான் முதல்.

திருமங்கையார் பாடின திருநெடுந்தாண்டகம் 30 பாசுரங்கள் கொண்டது.  இதில் மிகவும் ஈடுபட்டிருந்தவர் ‘ஸ்ரீபராசர பட்டர்’.  கூரத்தாழ்வானுடைய திருக்குமாரராய், பகவானே திரும்பப் பிறந்தான் என்று சொல்லுமளவுக்கு வைபவம் உடையவராய், பகவத் இராமானுஜர் நானேதான் பட்டராகப் பிறந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டவராய், பராசர பட்டருக்குப் பெருமை.

श्रीपरासर पत्तार्य: श्रीरङेस प्रोकित: ।
श्रीवत्शाङ्ग सुतश्रीमान् श्रेयशे मेस्तु बुयसे ।

[ ஸ்ரீபராசர பட்டார்யஹா ஸ்ரீரங்கேச புரோகிதஹா
ஸ்ரீவத்ஸாங்க ஸுதஸ்ரீமான் ஸ்ரேயஸே மேஸ்து பூயஸே ]

- என்று அவரைப் பத்தின தனியன்.  ஸ்ரீபராசர பட்டார்யஹா ஸ்ரீரங்கேச புரோகிதஹா – திருவரங்கத்தானுடைய ஆஸ்தானத்துக்கு பௌரோகித்ய கைங்கர்யம், புரோகிதராக பட்டர்தான் இருந்திருந்தார்.  ஸ்ரீவத்ஸாங்க ஸுதஹா – ஸ்ரீவத்ஸாங்கர், கூரத்தாழ்வான்.  ஸ்ரீவத்ஸன்னு அவர் திருநாமம்.  அவருடைய ஸுதஹ, அவருடைய திருக்குமாரர்.  ஸ்ரீமான் – நல்ல ஸ்ரீ சம்பத்து படைத்தவர்.  ஸ்ரேயஸே மேஸ்து பூயஸே – அவர் நம்மை அனுக்கிரகிக்கட்டும்ன்னு இந்தத் தனியன் சொல்லுகிறது.

இந்த 30 பாசுரங்களை எல்லா பாவத்திலேயும் ஆழ்வார் பாடியிருக்கார்.  அதாவது, ஞானத்தோடே ஆண் பாவனையிலேயும், பிரேமத்திலே தாய் மற்றும் மகள் பாசுரமாயும் பாடுகிறார்.  இந்த 30 பாசுரங்களை மூன்று பத்துப் பத்து பாசுரங்களாக பிரித்துக் கொண்டுவிட வேண்டும்.  முதல் பத்துப் பாசுரங்களும் ஆண் பாவனையில் பாசுரம்.  அடுத்த இருபது பாசுரங்களூம் பெண் பாவனையோடே நாயகி பாவத்தில் பாடினது.  அந்த இருபது பாசுரங்களை மேலும் பிரித்துக் கொண்டோம்னால், 11வது பாசுரத்திலிருந்து 20வது பாசுரம் வரை, தாய் பாவனையில் பாடினது.  21லிருந்து 30வது பாசுரம் வரை மகள் பாவனையில் பாடினது.  முதல் பத்துப் பாசுரங்கள் ஆண் பாவனை, நிறைய வேதாந்த அர்த்தங்கள் இருக்கும்.  ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு.  அடுத்த இருபது பாசுரங்கள் நேர்மார்.  முதல் பத்துப் பாசுரத்திலெ எவ்வளவு கஷ்டப்படுத்தினாரோ அது ஒன்னுமே அடுத்த இருவது பாசுரத்திலே இருக்காது.  ஆனா முதல் பத்துப் பாசுரம் புரிஞ்சாலும் புரிஞ்சுடும்.  அடுத்த இருவது பாசுரம் சுலபத்திலே புரியவே புரியாது.  ஏன்னா அந்த நிலை நமக்குப் புரிஞ்சான்னா, அந்த பாட்டு என்னன்னு புரியறதுக்கு.  ஆக மூன்று பிரிவுகளையும் சேர்த்துப் பார்த்தால், தானான தன்மை, தாயான தன்மை, மகளான தன்மை.

இதிலே என்ன அர்த்தம் சொல்றார்ன்னா,

मच्चित्ता मद्गतप्राणा बोधयन्त: परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥

[ மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் |

கதயந்தஸ்ச மாம் நித்யம் துஸ்யந்தி ச ரமந்தி ச ]

(பகவத்கீதை – 10.9)

இந்த ஸ்லோகத்திலே கண்ணன் மூன்று சப்தங்களைச் சொல்றார்.  மச்சித்தாஹ, மத்கதப்ராநாஹா, போதயந்தப் பரஸ்பரம்.  இந்த மூன்று சொற்களுடைய பொருளைத்தான் முதல் பத்துப் பாசுரங்கள், இரண்டாம் பத்துப் பாசுரங்கள், மூன்றாம் பத்துப் பாசுரங்கள்.  இந்த மூன்று சப்தத்துக்கு உண்டான அர்த்தத்துக்குத்தான் இவ்வளவு தூரம் விரிச்சுட்டார் திருநெடுந்தாண்டகத்திலே.  ஸ்வாமி, மூன்று சொல்லுக்கு முப்பது பாட்டான்னா, முந்நூறு பாடினாலும் தகும்.  மச்சித்தாஹா – என்னிடத்திலேயே நெஞ்சு லயித்தவர்களாய், மத்கதப்ராநாஹா – என்னை விட்டால் பிராணன் தரிக்காதவர்களாய், போதயந்தப் பரஸ்பரம் – என்னைப்பற்றி மற்ற பக்தர்களிடத்திலே பேசிப்பேசி திருப்திப்படுபவர்களாய், என் பக்தர்கள் இருக்கிறார்கள்.  பக்தர்களுக்கு கண்ணன் அடையாளம் சொல்லிண்டிருக்கார் இப்போ.  ஒரு பக்தன் எப்படி இருப்பன்னா, நெஞ்சு என்கிட்டதான் இருக்கும்.  முதல் அடையாளம்.  மற்றதைப் பத்தி அவன் நினைக்க மாட்டான்.  ரெண்டாவது, என்னோட கூடி இருந்தா உயிர் இருக்கும்.  இல்லேன்னா உயிர் போய்டும்.  மூனாவது, என் கதையையே ஒருத்தருக்கொருத்தர் பேசிப் பேசி ஆனந்தப்படுகிறான்.  கதயந்தஸ்ச – என் கதையையே, ஒருத்தருக்கொருத்தர் பேசிப் பேசி, துஸ்யந்திச – ஆனந்தப்படுகிறார்கள், திருப்திப்படுகிறார்கள்.  இப்படி இருக்கறவந்தான் அர்ஜுனா என் பக்தன், என்று கண்ணன் அடையாளம் காட்டறார்.  அந்த மூன்று சப்தங்களையும் மூன்று பத்துப் பாசுரங்களாலே பாடிட்டார்.

இல்லே இன்னொரு விதமாகப் பிரிக்கலாமா?  ஓம் நமோ நாராயணாய என்கிற திருமந்திரத்தில் மூன்று பதங்கள் இருக்கோல்லையோ?  அதிலே ஓம் என்கிற பிரணவத்தின் அர்த்தத்தை முதல் பத்துப் பாசுரங்களாலேயும், நமஹ என்னும் இரண்டாவது பதத்தின் அர்த்தத்தை இரண்டாவது பத்துப் பாசுரங்களாலேயும், நாராயணாய என்னும் மூன்றாவது பதத்தின் அர்த்தத்தை மூன்றாவது பத்துப் பாசுரங்களாலும், இப்படி ஓம், நமஹா, நாராயணாய இந்த மூன்று சப்தங்களின் அர்த்தத்தைச் சொல்றதுக்காகவே பாடினார் என்றும் கொள்ளலாம்.

அல்லது ஓம்காரத்தையே எடுத்துண்டோம்னால், ’அ’ ’உ’ ’ம’ என்று மூன்று எழுத்துக்கள்.  அதிலே ’அ’காரமான பகவானைச் சொல்லுவதற்காக முதல் பத்துப் பாசுரங்கள்.  ‘உ’காரத்தினுடைய அர்த்தத்தைச் சொல்றதுக்காக இரண்டாவது பத்துப் பாசுரங்கள்.  ‘ம’கார அர்த்தம் சொல்றதுக்காக மூன்றாவது பத்துப் பாசுரங்கள் என்றும் கொள்ளலாம்.

அப்படியும் இல்லேன்னா, திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம்ன்னு மூன்று இருக்கோல்லையோ?  அதிலே திருமந்திரத்தின் அர்த்தத்தைச் சொல்றதுக்காக ஒரு பத்துப் பாசுரம்.  அடுத்தது சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தைச் சொல்றதுக்காக பத்துப் பாசுரம்.  த்வயத்தின் அர்த்தத்தைச் சொல்றதுக்காக பத்துப் பாசுரம், என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  இப்படி பலவிதங்களிலும் இந்தப் பாசுரங்களுக்கு பூர்வர்கள் வ்யாக்யானம் பண்ணியிருக்கா.  என்ன சொல்லியிருக்கான்னு பார்ப்போம்.

முதல் பாசுரத்தாலே மூன்று தத்வங்களைப் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கிறார்.  சிது, அசிது, ஈஸ்வரர்கள்.  எந்த சாஸ்திரமா இருந்தாலும், அது சமஸ்கிருதமோ, தமிழோ முதல்ல இதைத்தான் தெளிவு படுத்துவா.  தத்வங்கள் எத்தனை?  தத்வம் ஏக தத்வம் அல்ல, தத்வத்ரேயம்.  மூன்று தத்வங்களுக்கும் ஆழ்வார் பெயர் குடுக்கிறார்,  ‘மின் உரு’, ‘பின் உரு’, ‘பொன் உரு’.  மின் உருன்னு சொன்னால் மின்னலைப் போல அஸ்திரமாக இருக்கக்கூடிய அசிதுன்னு அர்த்தம்.  மின்னலைப் போலே, ஸ்திரமா இல்லாமல், மாறிக்கொண்டே இருக்கக்கூடியது அசிது.  பின் உரு – அந்த அசித் தத்வத்துக்குள்ளேயேதானே ஜீவாத்மா மறைஞ்சு இருக்கார்.  இப்படி அசிதுக்குள்ளே ஜீவாத்மா இருப்பதாலே, மின் உருவான அசித்துக்குள் பின்னாடி இருக்கக்கூடிய உரு, ஜீவாத்மா, ‘பின் உரு’.  ஆக முன் உருன்னு சொன்னதுதான் ‘மின் உரு’.  முன்னாடி இருக்கக்கூடிய உருவம்தான் அசிது.  அது மின்னலைப் போலே அஸ்திரமாக இருக்கும்.  அந்த மின் உருவுக்குப் பின்னாடி இருக்கக்கூடியதுதான் பின் உரு.  அது நித்யமாக இருக்கும்.  ஆனால் இந்த ரெண்டு பேருக்கும் உள்ளே இருந்து ஆட்சி செலுத்தக்கூடியது ‘பொன் உரு’.  பொன் உருங்கிறது பரமாத்மாவைச் சொல்லும்.

மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய் *
         விளக்கொளியில் முளைத்தெழுந்த திங்கள் தானாய் *
பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பில்லாப் *
         பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது * எண்ணும்
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய்ப் *
         புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி *
தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை *
         தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே

(திருநெடுந்தாண்டகம் – 1)

பாசுரத்தில் சாதிக்கிறார், பகவன்னு நீ எப்படி தெரியுமா இருக்கிறாய்?  எனக்கு முதமுதல்ல உயர்ந்த அர்த்தத்தைக் காட்டிக் குடுத்தாய்.  தத்வத்ரேய விவேக ஞானத்தை எனக்கு ஏற்படுத்திக் குடுத்தாய்.  நான் நினைச்சிருந்தது ஆத்மாவும், தேகமும் ஒன்று என்று.  ஆனால் நீதான் பிரித்துக் காட்டினாய் எனக்கு.  எம்பெருமானேதான் நெஞ்சகத்தில் நிற்கிறான்.  நின்றவன் என்ன காட்டிக் குடுத்தானென்றால், இதுதான் மின் உரு, அஸ்திரம், நிற்காது.  பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பிலாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது – மின் உருவில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் எதுவும் பின் உருவுக்குக் கிடையாது.  இறக்காது.  அசிது இறக்கும், ஆனால் ஜீவாத்ம தத்வம் இறக்கவே இறக்காதோல்லையோ?  அப்போ அசித் தத்வத்துக்கு மாறுபாடு உண்டு.  ஆத்ம தத்வத்துக்கு மாறுபாடு கிடையாது.  பிணி, மூப்பு எல்லாம் ஆத்மாவுக்குக் கிடையாது.  இறப்பில்லை, பிறப்பில்லை, பிணி இல்லை, மூப்பு இல்லை, இது எதுவும் மிக உயர்ந்த உருவமான ஆத்ம தத்வத்துக்குக் கிடையாது.  ஆனால் அதுக்கும் மேலே பகவானுக்கு என்ன ஏற்றம்ன்னு பார்த்தால், எண்ணும் பொன் உருவாய் – இதுவாவது (ஜீவாத்மா) சரீரத்தை எடுத்துண்டு பிறந்திருக்கபடியால் கஷ்ட நஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கு.  அதுவும் பரமாத்மாவுக்குக் கிடையாது. சாஸ்திரம் சொன்னபடிக்கு,

आप्र्नकाथु शर्वएव श्वर्न: ।
हिरण्यश्मश्रु्: हिरण्यश्केष: ॥

[ ஆப்ரநகாத் ஸர்வஏவ ஸ்வர்நஹா |
ஹிரண்யஸ்மஸ்ருஹு ஹிரண்யஸ்கேஸஹா ]

ஆப்ரநகாத் ஸர்வஏவ ஸ்வர்நஹா – திருவடியிலேர்ந்து திருமுடி ஈறாக, எங்க பார்த்தாலும் ஸ்வர்ண மயமா இருப்பாராம் பகவான்.  ஹிரண்யஸ்மஸ்ருஹு – நீண்ட பொன் மயமான மீசை வச்சிண்டு இருப்பாராம்.  ஹிரண்யகேஸஹா – கேஸபாஸம் பொன்மயமாக ஓடிக்கொண்டு இருக்குமாம்.  இதைத்தான் ஆழ்வார் இப்போ பொன் உருவாய்ன்னார்.  நமக்கு சந்தேகம் வரும், பகவான் கருமை நிறத்தவன்னா கேள்விப்பட்டிருக்கோம்.  ஆழ்வார் பொன் உருங்கிறாரே?  அதுவும் தங்க வர்ணத்துல தலை மயிர் இருந்தா எப்படி இருக்கும்?  தங்க வர்ணத்துல மீசை இருந்தா எப்படி இருக்கும்?  அவர் கருப்பாத்தான் இருப்பர், எல்லாம் கருப்பாத்தான் இருக்கும்.  ஆனால் பொன் உருன்னு சொன்னது வர்ணத்துக்காக அல்ல. முதல் அர்த்தம்.  வர்ணத்துக்காக அல்லன்னா, சொல்லியிருக்காரேன்னா,  தங்கம்ன்னா श्प्र्कणीयथ्वम् (ஸ்ப்ருகணீயத்வம்).  அப்படின்னா தங்கம்ன்னு சொல்றச்சேவே ஒரு மதிப்பு நம்ம மனசிலே வர்றது பாருங்கோ. அதுக்குத்தான் தங்கம்ன்னு சொல்றாரே தவிர, தங்க வர்ணத்தவர்ங்கிறதுக்காக சொல்லப்படலே.  இல்லேன்ன இன்னொரு அர்த்தம் வச்சுக்கலாம்.  பகவான் ஓரோரு யுகத்தில் ஓரோரு வர்ணத்தில் இருக்கிறார்.  ’நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது; பாலின் நீர்மை, செம்பொன் நீர்மை, பாசியின் பசும்புறம் போலும் நீர்மை, பொற்புடைத்தடைத்து வண்டு விண்டுலா நீல நீர்மை’ என்று பகவானுக்கு நான்கு வர்ணங்கள் உண்டு.  வெள்ளை, சிகப்பு, கருநீலம் மாந்தளிர் பச்சை, கருப்பு, இப்படி நாலு யுகத்துக்கு நாலு வர்ணத்திலே இருக்காராம்.  அப்படி ஒரு வர்ணத்தையும் பொன் உருவாய்ன்னு சொல்லியிருக்கலாம்.  ஆக, என்னும் பொன் உருவாய். பகவான் எப்படி இருக்கிறார்?  எல்லா இடத்திலேயும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.  பூதம் ஐந்தாய் – பஞ்ச பூதங்களாகவும் அவர்தான் இருக்கிறார். அவ்வெம்பெருமானே எனக்குள்ளேயும் சேவை சாதிக்கிறான்.  இவர் எனக்குக் காட்டிக்குடுத்த அர்த்தம், தத்வத்ரேய விவேக ஞானத்தை எனக்கு ஏற்படுத்திக் குடுத்தார்.  அசிது வேறே, சிது வேறே, பரமாத்மா வேறே, என்ற ஞானத்தை எனக்கு ஏற்படுத்தினார்ன்னு சொல்லிட்டார்.  சொன்னவர் பிற்பாடு ஒவ்வொரு பாசுரங்களால் பெருமானைப் பத்தி விளக்கறதுக்கு ஆரம்பிச்சார்.  ஆண் பாவனையில ஞானத்தோடே பேசிண்டிருக்காரோல்லையோ?  அதனாலே வேதாந்த அர்த்தம் எல்லாம் பாடுவர்.

அந்தணர் மாட்டைந்தி வைத்த…

அந்தணர் மாடு – பிராம்ணர்களுக்கு மாடு.  மாடுன்னா தனம்ன்னு அர்த்தம்.  பிராம்ணர்களுக்கு தனம், ब्राम्ण्णानां दनम् वेत: (ப்ராம்ணானாம் தனம் வேதஹா).  வேதந்தான் பிராமணர்களுக்குத் தனமே.  அந்தணர் மாட்டந்தி, அந்தின்னா முடிவுன்னு அர்த்தம்.  அந்தணர் மாடுன்னா வேதம், வேதத்தோட அந்தின்னா, வேதாந்தம், உபநிஷத்துன்னு அர்த்தம்.  அந்தணர் மாட்டந்தி வைத்த மந்திரத்தை – உபநிஷத்துகளுக்குள்ளே மறைத்துப் பொக்கிஷத்தைப் போலே, பொற்கிழியைப் போலே வைக்கப்பட்டிருக்கிற மந்திரத்தை, மந்திரத்தால் – மந்திரத்தாலே.  மறவாதென்னும் வாழ்தியேல் – மந்திரத்தை மந்திரத்தால மறக்காமல் ஞாபகம் வைச்சுக்கோ, வாழலாம், அப்பதான் உனக்கு உஜ்ஜீவனம்ன்னார்.  மந்திரத்தை மந்திரத்தால மறக்காம இருக்கறதா?  எந்த மந்திரத்தைக் கொண்டு போய் உபநிஷத்துக்குள்ள ஒளிச்சு வச்சிருக்குன்னா, இந்த இடத்துல முதல் மந்திரத்தைங்கிறதுக்கு ‘பகவானை’ன்னு அர்த்தம்அடுத்த ‘மந்திரத்தால்’ங்கிறதுக்கு திருமந்திரத்தால்ன்னு அர்த்தம்.  திருமந்திரத்துக்கு மந்திரம்ன்னுதான் பேர்.  பகவானுக்கே மந்திரம்ன்னுதான் பேர்.  मन्थारं त्रयतेति मन्त्र: (மந்தாரம் த்ராயதேதி மந்த்ரஹா).  தன்னை நினைப்பவனை எது ரட்சிக்கிறதோ அது மந்திரம்.  பகவானை நினைக்கிறவரை ரட்சிக்கப் போறார்.  திருமந்திரத்தைச் சொன்னவனை அது ரட்சிக்கப் போறது.  அதனால மந்திரம்ன்னா பகவானேதான்.  மந்திரம்ன்னா திருமந்திரமேதான்.  அப்போ, வேதாந்தத்தில் பொக்கிஷத்தைப் போல மறைத்துச் சொல்லப்பட்ட பகவானை, திருமந்திரத்தால், பகவத் சொரூபத்தைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தாயானால் வாழலாம்.  அப்பதான் உனக்கு உஜ்ஜீவனம். அப்படின்னு ஆழ்வார் நெஞ்சைப் பார்த்துச் சொன்னார்.

11லிருந்து 20வரை தாய்ப்பாசுரங்கள். 21லிருந்து 30வரை நாயகி பாவனை பாசுரங்கள்.

-(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – திருநெடுந்தாண்டகம் உபந்நியாசம் – Houston)

September 15

நாச்சியார் திருமொழி

ஆழ்வார்கள் அனைவரும் சேர்ந்து பாடினதுதான் ’நாலாயிர திவ்ய ப்ரபந்தம்’ என்று நாம் அறிவோம்.  அதில் ஆண்டாளின் பங்கு இரண்டு திவ்ய ப்ரபந்தங்கள்.  இந்த இரண்டுமே முதல் ஆயிரத்தில் சேர்க்கப்பட்டன.  ஒன்றனுக்கு ’திருப்பாவை’ன்னு திருநாமம்.  மற்றொன்றுக்கு ‘நாச்சியார் திருமொழி’ன்னு திருநாமம்.  அவளே நாச்சியார்.  அவளுடைய திருவாக்கு, மொழின்னா வாக்கு, திருன்னா அவளே திரு. நாச்சியாருடைய திருவான வாக்கு, நாச்சியார் திருமொழி என்று பேர் பெற்றது.  திருப்பாவை – பாவைன்னா பதுமை, பொம்மைன்னு அர்த்தம். திருப்பாவை என்றால், மார்கழி மாசத்தில் கார்த்யாயினி தேவியைப் போல ஒரு பொம்மையைச் செய்து, அவளுக்குப் பூசை செய்து விரதம் இருந்து, கண்ணனையே தனக்குக் கணவனாகக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிப் பாடின பிரபந்தம்.  அதனாலே திருப்பாவை அப்படின்னு அதுக்குப் பேர் வந்தது.  முப்பது பாசுரங்களோடே கூடினது திருப்பாவை143 பாசுரங்களோடே கூடினது நாச்சியார் திருமொழி.  மார்கழி மாசத்துக்கென்று திருப்பாவை.  தை மாசத்துக்கென்று நாச்சியார் திருமொழி.  ஏன்னா ரெண்டு ப்ரபந்தமும் மாசப் பேரோடதான் தொடங்கறது.  ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ன்னு திருப்பாவை தொடங்கும்.  ’தையொரு திங்களும் தரை விளக்கி’ன்னு நாச்சியார் திருமொழி தொடங்கும். அதனாலே ஹேமந்த ருதுவினுடைய இரண்டு மாசங்களுக்காக இரண்டு பிரபந்தங்களை ஆண்டாள் அனுகிரகித்தாள்.  ஆழ்வாருக்கே (பெரியாழ்வார்) பெருமானிடத்தில் பரிவு அதிகம்.  அதையே என்னான்னு கேட்குமளவுக்கு ஆண்டாளுக்குப் பெருமானிடத்தில் பரிவு அதிகம்.  ஆண்டாளுக்குன்னு இருக்கற ஏற்றம், ஆழ்வார்களுக்கு இல்லாத ஒரு வைபவம்ன்னால், ஆழ்வார்கள் ஆண்களாகப் பிறந்துவிட்டுப் பெண் தன்மையை ஏறிட்டுக் கொண்டு பிரபந்தம் பாடினார்கள்.  ஆனால் ஆண்டாளுக்கோ, ‘ஜென்ம ஸித்த ஸ்த்ரீத்வம்’.  அவள் பிறக்கும் போதே பெண்ணாகப் பிறந்துட்டபடியால், செயற்கையா ஒன்றை ஏறிட்டுக்கனும்ங்கிற அவசியமே இல்லையோல்லையோ?  ஆண்களாகப் பிறந்துட்டு செயற்கையா ஒன்றை ஏறிட்டுக் கொண்டு ஆழ்வார்கள் பாசுரம்.  ஆனால் பெண்ணாகப் பிறந்து இயல்பாகவே பெண்ணான தன்மையோடே பாடினது, ஆண்டாளுக்கு உண்டான ஏற்றம்.  ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய். ஆழ்வார்கள் பாடின பிரபந்தங்களைக் காட்டிலும் இதுக்கு என்ன ஏற்றம்?  ஏதோ இருக்கிறதே.  என்னதுன்னு பார்த்தால், இது பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்.  இவளுக்குக் கோதைன்னு பேர்.  கோதா என்றால் மாலைன்னு அர்த்தம்.  இவ்வாண்டாளே தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமானுக்குன்னு சூடினபடியால் இவருக்கு சூடிக் குடுத்த நாச்சியார்ன்னு திருநாமம்.  இவள் பாடிக் குடுத்தபடியால் பாடவல்ல நாச்சியார்ன்னு திருநாமம்.  இவளே கோதா. கோதாம்பான்னு சொல்லுகிறார்கள்.

श्री विश्णुचित्त कुलनन्तन कल्पवल्लीं
श्री रञ्गराज हरिचन्तन योगदृश्याम्
शाक्षाथु शमां करुणैया कमलामिवान्यां
खोथाम् अनन्य सरण: सरणं प्रबत्ये

[ ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருஷ்யாம்
ஷாக்ஷ்ஷாது ஷமாம் கருணையா கமலா மிவாந்யாம்
கோதாம் அநந்ய சரணஹ சரணம் ப்ரபத்யே ]

கோதாஸ்துதியினுடைய ஆரம்பத்துல ஸ்ரீவேதாந்த தேசிகன் தெரிவிக்கிறார்.  ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம் – பெரியாழ்வாருடைய குலத்துக்கு பெருமை சேர்ப்பதற்காகவே அவதரித்தாள்.  என்ன அவர் குலம்?  என்ன பெருமை சேர்த்துட்டாள்ன்னா, பகவானுடைய திருமேனிக்குப் பரிந்து பல்லாண்டு பாடுவது அவர் குலம்.  மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவுதானன்றிப் பொங்கும் பரிவாலே வில்லிப்புத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்.  பொங்கும் பரிவு பெரியாழ்வாருக்கு.  அதைப்போலத்தான் பரிவு ஆண்டாளுக்கு.  இவள் பெண்ணாகப் பிறந்துட்டபடியால், அவளுடைய ஒரே குறிக்கோள், நாம் மானிடவர்கென்று பேச்சுப்படுவதில்லை.  லோகத்தில் இருக்கிற மனுஷ்யர்களுக்கு வாழ்க்கைப்படப் போவதில்லை.  பராத்பரனான சர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணன் திருவரங்கநாதனாக இருக்கிறான்.  அவனே கண்ணனாக அவதரித்தான்.  அந்தக் கண்ணனுக்கே வாழ்க்கைப் படுவோம்.  அரங்கனுக்கே வாழ்க்கைப் படுவோம், என்று தன் உள்ளத்திலே உறுதி பூண்டாள்.  அந்த உறுதி ஆண்டாளுக்கு எப்படி ஏற்பட்டதுன்னால், பெரியாழ்வார் சொல்லிக் குடுத்திருக்கிற கதைகள்.  பகவானுடைய வைபவத்தை நன்னா சொல்லி வைத்தார்.  அவனுடைய அவதார சேட்டிதங்களையெல்லாம் சொன்னார்.  அவனே பரதெய்வம்ங்கிறதைப் புரிய வைத்தார்.  புரிஞ்சவுடனே, அப்போ எந்த ஆத்மாவுமே இன்னொருத்தனுக்கு ஈடுபடக்கூடாது.  யார் ஜெகத்துக்கே காரணமோ, எவன் என்னைப் படைத்தானோ, காத்தானோ, எவன் எனக்கென்றே காத்திருக்கிறானோ, எவன் ஒருத்தனாலேதான் மோக்ஷத்தையே குடுக்க இயலுமோ, அவனைத்தவிர மற்றொருத்தன் இடத்தே நாம் கண் வைக்க மாட்டோம்.  அதனாலே திருவரங்கநாதனுக்குத்தான் ஆட்பட வேண்டும்ன்னு மனசிலே உறுதி கொண்டாள்.  ஆனா அது உடனே நடந்துடுமா?  நடந்துட்டா ஆண்டாள் பிரபந்தமே பாடமாட்டாளோல்லையோ?  பகவான் ஆண்டாளைப் பிறப்பிச்சிருக்கறது எதுக்கு?  உலகோரைத் திருத்த வேண்டும்ங்கிறதுக்காக. நிறையப் பாசுரங்களைப் பாடும், பாட்டை சொத்தா விட்டுட்டு வாரும்.  இது கொண்டு மக்கள் நம்மைப் புரிந்து கொள்வர்கள்.  இதுக்குன்னு பெருமாள் அவளை அவதாரம் பண்ண வைச்சிருக்கச்சே, ஆசைப்பட்டாள்ன்ன உடனே அவரும் அழைச்சிட்டுப் போய்ட்டார்ன்னு வச்சிக்கங்கோ, அப்புறம் பாட்டே வராதோல்லையோ?  அதனால இந்தப் பிரபந்தங்களைப் பாடுவிக்கனும்ங்கிறதுக்காகத்தான் ஆண்டாள் வைக்கப்பட்டாள்.  ஆனால் அவளுக்கோ பகவானை விட்டுப் பிரிவு, துடிப்பு, விரக தாபம். தாபத்தோடதான் தனக்குள்ள இருக்கற தாபத்தைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக இரண்டு பிரபந்தங்கள் பாடினார், திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும்.  அதிலே திருப்பாவை ரொம்ப பிரசித்தம்.  இப்போ பார்க்கப் போறது நாச்சியார் திருமொழி.

நாச்சியார் திருமொழியில் மொத்தம் 143 பாசுரங்கள்.  அதிலே மொத்தம் 14 பதிகங்கள் உண்டு.  என்னிக்கும் ஒரு பிரபந்தம்ன்னு எடுத்துட்டா அதை பத்துப் பத்துப் பாசுரங்களாக அனேகமா பிரிச்சுருவா.  பத்துப் பாசுரங்கள் கொண்டது ஒரு திருமொழி.  நாச்சியார் கோவில், நாச்சியார் திருமாளிகைன்னு ரெண்டு திவ்யதேசம் இருக்கு.  இப்போ இந்தப் பிரபந்தத்தினுடைய பேர் நாச்சியார் திருமொழின்னு இருக்கறதுனால முதல்ல பெயர்க்காரணம் பார்ப்போம்.  நாச்சியார்ன்னா ஆண்டாள்.  இன்னிக்கு அவள் அவதாரம் பண்ணி எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ‘நாச்சியார் திருமாளிகை’ன்னு பேர்’நாச்சியார் கோவில்’ன்னு ஒரு ஊர் உண்டு.  அது திருநரையூர், சோழ தேசத்திலே இருக்கு.  ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பாண்டிய தேசத்திலே உள்ளது.  மூன்று திவ்ய தேசங்கள் மூன்று நாச்சியார்களுக்குப் பெருமை.  ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி.  ஸ்ரீதேவி நாச்சியாருக்கு ‘திருவெள்ளரை’.  பூதேவி நாச்சியாருக்கு ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’.  நீளாதேவி நாச்சியாருக்கு ‘திருநரையூர்’.  இந்த மூன்று இடத்திலே இந்த மூன்று நாச்சிமார்களுக்குப் பெருமை.  இந்த மூன்று இடத்திலேயும் புறப்பாடு ஆகறச்சே நாச்சியார் பல்லக்கு முன்னாடி போகும், பெருமாள் பல்லக்கு பின்னாடி போகும்.  வேற எங்கேயும் இதைப் பார்க்க முடியாது.  முன்னாடிதான் பெருமாள் ஏழுவர், பின்னாடிதான் நாச்சியார் ஏழனும்.  ஆனால் இந்த மூன்று சன்னிதிகளில் முன்னாடி பிராட்டிக்கு வைபவம், பின்னாடி பெருமாள் எழுந்தருளுகிறார்.

நாச்சியார் திருமொழி மூன்று பிரகரணங்களாக (கட்டங்களாக) பிரிக்கப்படுகிறது.  முதல் ஐந்து பதிகங்களும் ஒரு பிரகரணம்.  ஆறாம் பதிகம் இரண்டாவது பிரகரணம்.  7,8,9,10,11,12,13,14 பதிகங்கள் மூன்றாவது பிரகரணம்.  முதல் பிரகரணம் திருக்கல்யாணக் கனவு காண்பதற்கு முன்பாக.  இரண்டாம் பிரகரணம் திருக்கல்யாணக் கனவு.  மூன்றாவது பிரகரணம், கல்யாணம் ஆன பிறகு நடப்பவை.

முதல் பதிகம், காம தேவனிடத்தும் சாம தேவனிடத்தும் காலிலே விழுந்து எப்படியாவது கண்ணனை எனக்குக் கணவனாக பெற்றுக் குடுங்கோள் என்று பிரார்த்திக்கிறாள்.

இரண்டாம் பதிகம், நாமம் ஆயிரம் ஏத்த நின்றங்கிற பதிகம்.  இதாலே சிற்றில் வந்து சிதையேலே என்று கண்ணனுடைய பால்ய சேட்டிதம் ஒன்றைச் சொல்லி, எங்களுடைய சிந்தனையை இப்படி சிதைத்து விடாதே.  உன்னை அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஆனா அந்த ஆசை நடக்காதபடிக்கு சிதைச்சுடாதே என்று ஆண்டாள் கண்ணனிடத்தே பிரார்த்திக்கிறாள்.

மூன்றாம் பதிகத்தாலே, கோழி அழைப்பதன் முன்னம்ன்னு பாசுரம். கவர்ந்த துணிகளை வேண்டி கன்னியர் கண்ணனை இரத்தல்.  அதில் இந்திரியங்கள் நம்மை துன்புறுத்துகின்றன, மனசு நம்மை அடக்கப் பார்க்கிறது, கண்ணனே நீ நம்மை அடக்கி ஆட்கொள்ள வேண்டும், என்று பிரார்த்தித்தது மூன்றாவது பதிகத்தினுடைய கருத்து.

அடுத்து நாலாவது பதிகம், நீ கூடிடு கூடலேன்னு பிரார்த்திக்கிறாள்.  சம்ப்ரதாயத்திலே வடக்குத் திருமலை, திருவேங்கடம்தெற்குத் திருமலை திருமாலிருஞ்சோலைமலைகீழவீடு திருக்கண்ணபுரம்மேலவீடு திருவரங்கம்.  இவை நான்கையும் இந்த நாலாம் பதிகத்தின் முதல் இரண்டு பாசுரங்களில் சேர்க்கிறாள் ஆண்டாள்.

ஐந்தாம் பதிகம் குயில் பாட்டு. மென்னடை அன்னம் என்று பெரியாழ்வாரையே குறிக்கிறாள்.  நடை என்பது நடத்தை, ஆச்சாரத்தை குறிக்கிறது.  ஸ்ரீவில்லிபுத்தூரில் ரங்கமன்னார் சன்னிதியில் எங்குமே காண முடியாத ஆச்சர்யமாய், வலப்பக்கம் ஆண்டாள், நடுவில் பெருமாள், இடப்பக்கம் கருடன், என்று சேவை சாதிக்கிறார்கள். இது அ, உ, ம என்ற பிரணவ தத்துவத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

ஆறாம் பதிகம், வாரணம் ஆயிரம் என்று தொடங்கும் திருக்கல்யாண வைபவம்.  வாரணமாயிரம் – ஆயிரம் யானைகள்.  எப்படி கண்ணனுக்கு ஆயிரம் யானைகள்?  அவர்கிட்ட மாடுதானே இருக்கும்?  கண்ணன் பிறந்தது ஷத்ரிய குலம், வளர்ந்தது வைசிய குலம்.  பிறந்த குலத்திலேர்ந்து அவருக்கு ஆயிரம் யானைகள்.  வளர்ந்த குலத்திலேர்ந்து கறவைக் கணங்கள்.  சரி, எதற்கு ஆயிரம் யானைகள்?  அவர் ஒருத்தர்தானே வரார்?  அவருடைய தோழர்கள் ஆயிரம் பேர்கள்.  ஒவ்வொருவரையும் ஒரு யானை மேல் ஏற்றி அழைத்து வருகிறார்.  பொதுவாக கல்யாண மாப்பிள்ளை மட்டும்தான் சிறப்பு வாகனத்தில் வருவர்.  ஆனால் பகவானுக்கு இருக்கிற குணம், அவனிடம் சரணம் என்று சொல்லியவர்களை தனக்குச் சமமாக உயர்த்தி அமர வைக்கிறான்.  பெரியவாச்சான் பிள்ளை இதன் உட்கருத்தாக சாம்யாபத்தி மோக்ஷத்தைக் கூறுகிறார்.  பகவானிடத்தில் ஒருத்தன் சரணம் என்று சொல்லி, அவன் மோக்ஷம் அடையும் போது, பகவானுடைய எட்டு கல்யாண குணங்களை அடைந்து ‘சாம்யாபத்தி மோக்ஷம்’ அடைகிறான்.  அந்த எட்டு கல்யாண குணங்களாவன,

अपकतपाप्मा विजर: विमुर्ति: विसोक: विजकिक्स: अपिपाश: सत्यकाम: सत्यसङल्प:

[ அபகதபாப்மா விஜரஹா விமுர்த்திஹு விசோகஹா விஜகிக்ஸஹா அபிபாஸஹா சத்யகாமஹா சத்யசங்கல்பஹா ]

அபகதபாப்மா – பாபம் தீண்டாத தன்மை;  விஜரஹா – மூப்பு கிடையாது;  விமுர்த்திஹு – மரணம் கிடையாது;  விசோகஹா – சோகமே கிடையாது;  விஜகிக்ஸஹா – பசி கிடையாது;  அபிபாஸஹா – தாகம் கிடையாது;  சத்யகாமஹா – ஆசைப்படக்கூடிய குணங்கள் படைத்தவர்;  சத்யசங்கல்பஹா – எடுத்த செயல் அத்தனையும் முடிக்கிற தன்மை.

ஏழாம் பதிகம், கல்யாணம் ஆன பிறகு உண்டான வைபவம்.  கற்பூரம் நாறுமோ பாசுரம்.  சக்கரத்தாழ்வானுக்கு இல்லாத பெருமை சங்கத்தாழ்வானுக்கு உண்டு.  சங்கத்தாழ்வான் பகவானுடைய இடக்கையை விட்டு நீங்குவதே இல்லை.  சக்கரத்தாழ்வார் எதிரிகளை அழிக்க பகவானுடைய கையை விட்டு நீங்கி திரும்பவும் வருகிறார்.  சங்கத்தாழ்வானுக்கு பகவானுடைய திருவாயமிர்தம் கிடைக்கும். சக்கரத்தாழ்வானுக்கு அது கிடைக்காது.  அதனாலே சக்கரத்தாழ்வானைவிட சங்கத்தாழ்வானுக்கு வைபவம் அதிகம்.

எட்டாம் பதிகம், திருவேங்கடவனுக்காக ஆண்டாள் விட்ட தூது.

ஒன்பதாம் பதிகம், தெற்குத் திருமலை, திருமாலிருஞ்சோலைமலை அழகருக்காக அமைத்தாள் ஆண்டாள்.  நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்கார அடிசல் இந்த பதிகத்தினாலே சமர்ப்பித்தாள்.  அவள் பாடினதை, அவள் ஆசைப்பட்டதை நிறைவேற்றுவது நமது பொறுப்பு எனக்கொண்டு, பகவத் இராமனுசர் வந்து நேரடியாக சமர்ப்பித்து நிறைவேற்றி வைத்தார்.  இதனாலே இராமனுசர் ‘கோயில் அண்ணனாக’ ஆண்டாளால் பாவிக்கப்படுகிறார்.  அந்த அக்கார அடிசில் இன்னைக்கும் சமர்ப்பிக்கலாம்.

பத்தாவது பதிகம், இராமசந்திரனுடைய ’சொல்’, கண்ணனுடைய ’வார்த்தை’, வராகனுடைய ’பேச்சு’, அதாவது இராம சரம ஸ்லோகம், கண்ணனின் சரம ஸ்லோகம், வராக சரம ஸ்லோகம் இவற்றைக் குறித்து பாடியது.

பதினோராவது பதிகம், திருவரங்கநாதனுக்கென்று பாடியது.

பனிரெண்டாவது பதிகம், இனி நம்மால் தாங்க முடியாது என்று பிருந்தாவனத்துக்கு என்னை உய்த்திடுமின், மதுரைக்கு என்னை உய்த்திடுமின், யமுனை நதி தீரத்துக்கு என்னை உய்த்திடுமின் என்று, இங்கிருந்தால் என் உயிர் தரிக்காது, சீக்கிரம் என்னை கண்ணன் இருக்குமிடத்துக்கு கொண்டு போங்கோள் என்று பாடியது.

பதிமூன்றாவது பதிகம், கண்ணனுடைய வஸ்திரத்தை கொண்டு வந்து வீசுங்கோள், அவன் தரித்த துளசியைக் கொண்டு வந்து வீசுங்கோள். அப்போதுதான் நாம் தரிப்போம் என்று தெரிவித்தாள்.

பதினாலாவது பதிகம், ரெண்டு பேர் சேர்ந்து பாடற பாட்டு. ஆண்டாள், மற்றும் இன்னொரு கோபிகைன்னு வச்சுக்கங்கோ.  ஆண்டாள் கண்ணன் எங்கே, எங்கேன்னு தேடறா.  இந்த மாதிரி பிள்ளை ஒருத்தர் இந்த அடையாளத்தோட போறத பார்த்தீளோ?  அப்படின்னு ஒருத்தர் கேப்பா.  அந்தப் பிள்ளைதானே, பார்த்தேனே, அப்படின்னு இன்னொருத்தி பதில் சொல்லுவோ.

இப்படி நாச்சியார் திருமொழி பாடப்பட்டிருக்கிறது.

-(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாச்சியார் திருமொழி உபந்நியாசம் – Houston)

June 26

நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 5

முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4

ஆறாம் பத்து, ரொம்ப ஆச்சர்யமான பத்து பாசுரங்கள்.

துவளில் மா மணி மாடம் ஓங்கு *
தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை * நீர் இனி அன்னை மீர்! *
உமக்காசை இல்லை விடுமினோ *
தவள ஒண்சங்கு சக்கரம் என்றும் *
தாமரைத் தடங்கண் என்றும் *
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க *
நின்று நின்று குமுறுமே

(திருவாய்மொழி – 6.5.1)

இதைத் தோழிப் பாசுரமாக தாயாரைப் பார்த்து சொல்லிண்டிருக்கா தோழி.  இனிமே இந்தப் பெண்கிட்டே ஆசையே வைக்காதீங்கோ.  அவ அவ்வளவுதான்.  எப்ப அவ அந்த திருத்தொலைவில்லி மங்கலம் அரவிந்தலோசனுக்குன்னு மனசைப் பறிகொடுத்துட்டாளோ, இனிமே நீங்க என்ன பேசியும் பிரயோஜனமில்லே.  குமுறும் ஓசை விழவொலி தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு – ஆசையில்லாம விடுவதற்கு நீங்கதானே வழி தேடிக் கொண்டீர்?  ஏன்னா, ஏற்கனவே தொலைவில்லி மங்கலத்துக்குப் போகாதேன்னாளாம்.  சின்னக்கதை பார்ப்போம்.  நம்மாழ்வார் பிறந்தார்.  பிறந்தவுடனே ஜோசியக்காராளா கூட்டி ஜாதகம் எழுதினா.  அவர் எல்லாம் நல்லாத்தான் இருக்கும், பொண்ணு நல்லாத்தான் வாழுவோன்னு சொல்லிட்டு, ஆனா இந்த தொலைவில்லி மங்கலம் ரெட்டைத் திருப்பதி பெருமாளை மட்டும் சேவை பண்ணி வைக்காதீங்கோ.  பண்ணி வைச்சா இந்தப் பொண்ணு உங்க பொண்ணே இல்லேன்னு அன்னைக்கே சொல்லிட்டார்.  தாயார் எல்லாரும் கூடி முடிவெடுத்தாளாம்.  இந்த பொண்ணை சேவை பண்ணி வைக்கலாமா, இல்லே நமக்குப் பொண்ணு வேணும்ன்னா சேவை பண்ணி வைக்காம இருந்துடலாமா?  ஆனா அவா குலதெய்வமே அந்தப் பெருமாள்தான்.  யார் குடும்பத்துல பிறந்தாலும் அவரை சேவிச்சுத்தான் ஆகனும்.  அப்போ நம்மாழ்வாரோட தாயார் முடிவெடுக்கறா.  இந்தப் பெண்ணு நம்மளிடத்திலே இருக்கட்டும், இல்லாது போகட்டும், அந்த பெருமாளை சேவிச்சுத்தான் ஆகணும்.  அன்னைக்கு முடிவெடுத்துக் கொண்டு போய் சேவை பண்ணி வைச்சாளோல்லையோ?  அன்னைக்கே அந்தப் பெருமாளுக்குன்னு அந்தப் பொண்ணு ஆயிட்டா.  இது நீங்க எப்பவோ எடுத்த முடிவாச்சே.  இன்னைக்கு வந்து மனசைப் பறிகொடுத்துட்டாளேன்னு சொல்றதுல ஏதானும் அர்த்தம் உண்டா?  குமுறும் ஓசை விழவொலி தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு – இந்தப் பெண்ணை விழா ஒலியோடு இருக்கக்கூடிய தொலைவில்லி மங்கலத்துக்கு அழைச்சுட்டுப் போனீர்கள்.  செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் – பிரான், எம்பெருமான் இருக்கறதையும் இவளுக்கு சேவை பண்ணி வச்சீர்கள்.  அன்னிலேர்ந்து இந்தப் பெண் தன் வசத்திலேயே இல்லே, என்று தொலைவில்லி மங்கலத்துக்காக பத்துப் பாசுரம் பாடினார்.  அது தோழிப் பாசுரமாக.

அதே இன்னொரு பத்துப் பாசுரங்கள்.  மன்னார்குடி இராஜ கோபாலனுக்கு அதிலேர்ந்துதான் ஒரு பாட்டை எடுத்து மணவாள மாமுனிகள் சமர்ப்பித்தார்.

தீர்ப்பாரையாம் இனி * எங்ஙனம் நாடுதும் அன்னைமீர் *
ஓர்ப்பால் இவ்வொண்ணுதல் * உற்ற நல் நோய் இது தேறினோம் *
போர்ப்பாகு தான் செய்து * அன்றைவரை வெல்வித்த * மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு * இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே

(திருவாய்மொழி – 4.6.1)

பெண்ணுக்குப் பெருமானிடத்தில காதல்.  மூர்ச்சித்துக் கிடக்கறா.  ஏதோ பூதப் பிரேத பிசாசம் பிடிச்சுடுதுன்னுட்டுன்னு அம்மா நினைச்சுனுட்டா.  நினைச்சினுட்டு, குறத்தி எல்லாம் கூப்பிட்டு அவளைக் குறி சொல்லச் சொல்றா.  ஏன்னா என்ன வந்துடுத்துன்னு, மோந்து பார்ப்பாளாம், இப்படி நாடி பிடிச்சுப் பார்ப்பா.  அதுக்கு அவ என்னென்னமோ பண்றா.  சோழியெல்லாம் தூக்கிப் போடறா. முறத்தைக் கொண்டு வந்து வச்சு நெல்லைத் தூக்கி வீசறா.  இதெல்லாம் வரத வச்சிண்டு யார் இவள் பேரில பிடிச்சிண்டிருக்கான்னு அந்தக் குறத்தி சொல்லுவள் போலருக்கு.  அதுக்காக கூப்பிட்டுட்டு பண்ண ஆரம்பிக்கிறா.  அப்போ தோழி வந்தா.  என்னத்துக்கு இதெல்லாம் ஏற்பாடு பண்ணிண்டிருக்கீள்ன்னு கேக்கறா.  இல்லேல்லே, இந்தப் பெண்ணை யார் பிடிச்சிண்டிருக்கான்னு நான் கண்டுபிடிச்சாகனும்ன்னு தாயார் சொல்றா.  என்னமோ பைத்தியக்காரத்தனம் பண்ணிண்டிருக்கேளே இப்போ.  ஏற்கனவே அவ அவனுக்கு மனசை பறிகொடுத்தாச்சு.  நீங்க இதெல்லாம் வேற பண்ண ஆரம்பிச்சேள்ன்னா ஒட்டிண்டிருக்கற உயிரும் போய்டப் போறது.  இதுதான் நடக்கும்ங்கிறதுக்காக அந்தத் தோழி வந்து தடுக்கிறாள்.  இந்தப் பெண்ணினிடத்தில இதெல்லாம் நீங்க பண்ணாதீங்கோ.  யாராரோ வந்து ஏதேதோ தப்புத்தப்பா அர்த்தம் சொல்லிடப்போறா, வேண்டாம்னு மறுத்தாளோல்லையோ?  அதுக்குன்னு ‘சகி வெறிவிலக்குதல்’ன்னு தமிழ் இலக்கியத்திலே ஒரு வழக்கம்.  சகின்னா தோழி, வெறி விலக்குதல்ன்னா, இவா ஏதோ தப்பு பண்ணப்பார்க்கிறாளோல்லையோ, இந்தப் பெண்ணுக்கு வேற ஒரு மாப்பிள்ளை பார்த்துட்டாள்ன்னா, அது கூடாதுன்னு விலக்குவதற்குத்தான் இந்தப் பத்துப் பாசுரங்கள் பாடினார்.

ஏழாம் பத்துக்குன்னு இருக்கிற தனிச்சிறப்பு, தாய்ப்பாசுரம், திருவரங்கத்துக்குன்னு இருக்கிற பத்துப் பாசுரங்கள் பாடினார்.

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் *
கண்ண நீர் கைகளால் இறைக்கும் *
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் *
தாமரைக் கண் என்றே தளரும் *
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டென்னும் *
இரு நிலம் கை துழாவிருக்கும் *
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்! *
இவள் திறத்தென் செய்கின்றாயே

(திருவாய்மொழி – 7.2.1)

திருவரங்கத்தானினுடைய திருமணத் தூண்கள் இரண்டு.  அதுக்கு முன்னாடி இந்தப் பராங்குச நாயகியைக் கொண்டு போய் கீழ போட்டுட்டார் தாயார்.  இந்தப் பெண்ணு உன்னையே நினைச்சிண்டு மூர்ச்சையா கிடக்கிறா.  நீ திரும்பிப் பார்த்தாத்தான் உண்டு.  நான் நினைத்து ஒரு பிரயோஜனமும் இல்லே.  இவளைப் பத்தி நீ என்ன நினைத்தாய்ன்னு தாயார் கேக்கறது பத்துப் பாசுரங்கள்.

அதற்கடுத்தது தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதன், நவதிருப்பதி திவ்யதேசத்துக்குள்ளே தென் திருப்பெரை ஒன்று.

வெள்ளைச் சுரி சங்கொடாழி ஏந்தித் *
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே *
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் *
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள் *
வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த *
வேத ஒலியும் விழா ஒலியும் *
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் *
அறாத் * திருப்பேரையில் சேர்வன் நானே

(திருவாய்மொழி – 7.3.1)

நீங்க என்ன பேசினாலும் நான் கேக்கறதாயில்லே.  என் நெஞ்சு திருப்பேரை பெருமானிடத்தில போய்டுத்து.  நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கில்லை என் தோழிமீர்காள் – எனக்கினி நாணமில்லை, வெட்கமில்லை.  பகவானைத்தேடி நான் போகத்தான் போகிறேன்னுட்டு பொண்ணு புறப்பட்டுப் போறா.  அதை ஏழாம் பத்தாலே சாதித்தார்.

இப்படி பல பதிகங்களாலே தூதுவிடுதல் பார்த்தோம், அனுகாரம் பார்த்தோம், மடலெடுத்தல் பார்த்தோம், பிரிவு ஆற்றாமையாலே துடித்தல் பார்த்தோம்.  ஆறாம் பத்தில் ’மின்னிடை மடவார்கள்’ன்னு பத்துப் பாசுரம்.  அதான் ஊடல் பாசுரம்.

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் *
          முன்பு நானதஞ்சுவன் *
மன்னுடை இலங்கை * அரண் காய்ந்த மாயவனே *
          உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் * இனி அது
கொண்டு செய்வதென் *
          என்னுடைய பந்தும் சுழலும் * தந்து போகு நம்பீ

(திருவாய்மொழி – 6.2.1)

வாசல்ல வந்து தோட்டத்துல நிக்கிறார் பெருமாள்.  பராங்குச நாயகியும் தோழியும் பூப்பந்து ஆடிண்டு இருக்கா.  ஒரு பத்து நிமிஷம் நாழி கழிச்சு வந்துட்டார்.  ஆறு மணிக்கு வரேன்னு சொல்லியிருந்தார்.  ஆனா நாழியாக்கி, ஆறு பத்து, ஆறே கால்.  என்ன கோபம் இந்த நாயகிக்குன்னா, ஆறு மணிக்கு வரென்னு சொன்னியோல்லியோ?  நீ ஏன் வரலே?  அப்படிங்கறதுக்காக கதவடைச்சுத் தள்ளிட்டா இப்போ.  இது இங்கே.  ஏன் அவருக்கு நாழியாச்சு?  வரேன்னு சொன்னவர் ஆறு மணிக்கு வந்திருக்கலாமோல்லையோ?  என்னத்துக்கு ஆறு பத்து, ஆறேகால் ஆக்கிட்டார்ன்னா, அதுக்குப் பரகால நாயகி தான் பதில் சொல்லியிருக்கார்.  இங்கே எப்படி கோபத்தாலே, பிரணய ரோஷத்தாலே மின்னிடை மடவார்களோ, அதேபோல அவரும் பத்துப் பாசுரம் பாடினார்.

காதில் கடிப்பிட்டுக் * கலிங்கம் உடுத்து *
தாது நல்ல * தண்ணந் துழாய் கொடணிந்து *
போது மறுத்துப் * புறமே வந்து நின்றீர் *
ஏதுக்கிதுவென் * இதுவென் இதுவென்னோ

(பெரிய திருமொழி – 10.8.1)

இந்தப் பெருமான் என்னத்துக்காக வந்து நிற்கிறார்?  அவர், போது மறுத்துப் புறமே வந்து நின்றீர் – கதவோரமா வந்து நின்னுண்டாராம்.  ஆறுக்கு வரேன்னு சொல்லிட்டு ஆறேகாலுக்கு வந்துட்டீரோல்லையோ?  உம்ம யாரு இந்த இடத்தில வரச்சொன்னா இப்போ?  ஏதுக்கிதுவென் இதுவென் இதுவென்னோ – இங்க நீர் வர வேண்டிய தேவையே இல்லே, போம்.  பெருமாள் வாயைத் திறந்து, என்னத்துக்கு கால் மணி அவகாசம் ஆயிடுத்துன்னு கேளேன்.  அதைச் சொல்லுவேனோல்லையோ?  அதைக் கேட்காமலே நீ கோவிச்சுக்கறியேன்னா,

துவராடை உடுத்து * ஒரு செண்டு சிலுப்பி *
கவராக முடித்துக் * கலிக் கச்சுக் கட்டி *
சுவரார் கதவின் புறமே * வந்து நின்றீர் *
இவரார் இதுவென் * இதுவென் இதுவென்னோ

(பெரிய திருமொழி – 10.8.2)

நீ வந்ததெல்லாம் ரொம்ப நன்னா எனக்குத் தெரியும்.  துவராடை உடுத்து, கலிங்கம் உடுத்து – பெருமாள் நிறைய அலங்காரமெல்லாம் பண்ணிண்டு பரகால நாயகியை அனுக்கிரகம் பண்ணக் கிளம்பிட்டார்.  ஆறு மணிக்கு கிளம்பனும்ன்னா அஞ்சரைக்கு அலங்காரம் பண்ணிண்டு வேகமாப் போகணுமோல்லையோ?  எல்லாம் பண்ணினுட்டார்.  அவரோ மாடு மேய்க்கப் போறவர். கண்ணனோல்லையோ?  பகல் பொழுது முழுக்க மாடு மேய்ச்சுட்டுத் திரும்பி வந்தா, எல்லா அலங்காரத்தையும் மாத்திக்கணும்.  மாடு மேய்க்கிற அலங்காரத்தோட போனால் எந்த நாயகி திரும்பிப் பார்ப்பள்?  அதனாலதான் சரின்னு எல்லா அலங்காரத்தையும் மாத்தினுட்டார்.  இப்போ நல்ல ஆடை எல்லாத்தையும் அணிஞ்சிண்டாச்சு.  புஷ்பம் எல்லாம் சூடிண்டாச்சு.  புறப்பட்டுப் போறச்சே இப்படிக் கண்ணாடி வச்சிருந்தது வாசப்படிக்குப் பக்கத்திலே.  அதை ஒரு பார்வை பார்த்துண்டு போக மாட்டாளா?  எல்லாம் சரியா அலங்காரம் பண்ணிண்டு இருக்கமான்னு பார்க்கறதுக்காகப் பார்த்தா, நித்யபடிக்கே மாடு மேய்க்கப் போறச்சே, காதில இருக்கற தங்கக் குண்டலங்களை எல்லாம் யசோதை கழட்டிடுவோ.  ஏன்னா அதிலே இருக்கிற இரத்தினமெல்லாம் கீழே விழுந்துடறது, காட்டில அங்கயிங்க போய்ட்டு வரதுக்குள்ளே.  அதனால அதைக் கழட்டிடு துணித்திரி போட்டுத்தான் அனுப்புவளாம்.  இந்த காது தூந்து போய்டாது இருக்கணும்னா துணித்திரி போடணும்.  அதைக் கழட்டிட்டோம்ன்னா சீக்கிரமே இளம் வயசிலே தூர்ந்து போய்டும்.  அதனால துணித்திரி போட்டு அனுப்பிச்சிருந்தா.  மத்த எல்லாத்தையும் மாத்தினுட்டார் பெருமாள்.  அதை மட்டும் கழட்டலே.  இது இத்தனையும் தங்கம் தங்கமாப் போட்டுகிட்டு, துணித்திரிய மட்டும் கழட்டாம போனா நன்னாயிருக்குமா?  அதனால பார்த்துட்டு, உள்ள போய் பெட்டியைத் திறந்து, நிறைய குண்டலம் வச்சிருந்தார்.  பார்த்து ரெண்டு குண்டலத்தை எடுத்துக் கண்ணாடி முன்னாடி நின்னு அது சரியா இருக்கான்னு பொருத்திட்டு ஒருதரம் பார்த்துட்டு வரணுமோல்லையோ?  பத்து நிமிஷம் ஆய்டுத்து.  ஆறு மணிக்கு போறேன்னு சொன்னவர், ஆறேகால் ஆச்சு.  அதைப் பாட்டிலேயே சொல்லிட்டார்.  காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்து தாது நல்ல தண்ணந் துழாய் கொடணிந்து – இதெல்லாம் பண்ணிக்கறதுக்கு, போது மறுத்து – உனக்கேன் போது (பொழுது) ஆயிடுத்து?  இந்த அலங்காரமெல்லாம் சீக்கிரம் நீ பண்ணிண்டு வந்திருக்கணும்.  அது வராததுனாலதான் உனக்கு போதாயிடுத்து.  நீர் இங்கே வரவேண்டியதேயில்லே.  இவரார் கதவின் புறமே வந்து நின்றீர் இதுவென் இதுவென் இதுவென்னோ, என்று பரகால நாயகி பத்துப் பாசுரங்கள்.  ஒரு செண்டு சிலுப்பி – கையில ஒரு மலர் செண்டு பிடித்து, மெதுவா அதை அசைச்சிண்டே வரார்.  யாரேனும் பார்த்து எதுக்குப் போகிறீர்ன்னு கேட்டா, பரகால நாயகியை அனுகிரகிக்கப் போறேன்னு சொன்னா இவர் பெருமை குறைஞ்சு போய்டுமாம்.  அதுக்காக இதை இப்படியே வெறும திருப்பிண்டு, ஒரு செண்டு சிலுப்பி.  கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி – தலையைத் தூக்கி அவர் சீவியிருக்கற அழகைப் பார்த்தாலே யாரும் மனசைப் பறிகுடுத்துடுவர்கள்.  அப்படி ஒரு அழகிய திருக்கோலத்தோடே வந்தீர்.  ஆனா நான் மனசைப் பறிகுடுக்கறதா இல்லே.  நீர் அங்கேயே நில்லும், என்று பரகால நாயகி சொல்லுவதாக ‘காதில் கடிப்பிட்டு’.  நம்மாழ்வார் ஊடினது ‘மின்னிடை மடவார்கள்’.  அதே குலசேகர ஆழ்வாரும் ‘ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்’ன்னு ஊடினார்.  அதனால ஊடல் திறம்ங்கறதுக்காக் இந்த விசயம் பார்த்தோம்.

இப்படி பல பத்துப் பத்துப் பதிகங்களாக நம்மாழ்வார் 27 பதிகங்களில் நாயகி பாவத்தில் பாடியிருக்கிறார்.  திருமங்கையாழ்வாரும் பல திவ்யப்பிரபந்தகளில், ஆறு திவ்யப் பிரபந்தங்களுக்குள்ளே, பெரிய திருமொழியிலாகட்டும், திருநெடுந்தாண்டகத்திலாகட்டும், இந்த ரெண்டு இடத்திலதான் பிரதானமா நாயகி பாவத்தில் பாடியிருக்கார்.  திருமங்கையாழ்வாருக்கு ஒரு வேறுபாடு என்னன்னா, தாய்ப்பாசுரமும், மகள்ப் பாசுரமும் ஸ்பஷ்டமா இருக்கும்.  ஆனா தோழிப் பாசுரம் ஸ்பஷ்டமா இருக்காது.  ஆனா இந்த மகள் பாடறதப் பார்த்தா ஒரு தோழி இருந்திருந்தாத்தான் பேசியிருக்க முடியும்.  நாம யூகிச்சுக்கணும்.  இப்ப நான் பேசறேன்னு வச்சுக்கங்கோ, நான் தனியா உட்கார்ந்து பேசறேன்னு நினைப்பேளா?  நீங்க யாரோ உட்கார்ந்திருக்கவேதான நான் பேசிண்டிருக்கேன்.  அதேபோல திருமங்கையாழ்வார் பாட்டைப் பார்க்கறச்சே யாரோ தோழி பக்கத்தில இருந்திருக்கான்னு நமக்குப் புரியும்.  அவர் சொல்லியிருக்கற பாட்டு அப்படித்தான் இருக்கு.  ஆனா தோழி பேசியிருக்கறது பாட்டிலே இல்லே.  இப்போ தோழிப்பாட்டாக அதிலே இருக்கணுமோல்லையோ?  அந்த மாதிரி அதிலே இல்லே.  அதனால் நம்மாழ்வாரிடத்திலே மூன்று பாவனையும் ஸ்பஷ்டம்.  திருமங்கையாழ்வாரிடத்திலே ரெண்டு பாவனை.  அதிலே திருநெடுந்தாண்டகங்கிறது ரொம்ப ஆச்சர்யமான பத்துப் பாசுரம்.  மொத்தம் முப்பது பாட்டு அதிலே.  அதில முதல் பத்துப் பாசுரங்கள் ஞான பாவனையோட பாடிட்டார்.  அடுத்த பத்து தாய்ப்பாசுரமாகப் பாடறார்.  கடைசிப் பத்து மகள் பாசுரமாகப் பாடுகிறார்.  இந்தத் தாயர் பெண்ணைப் பார்த்து வருத்தப்டறா.

பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் *
பனி நெடுங்கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் *
எட்டுணைப் போதென் குடங்கால் இருக்ககில்லாள் *
எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் *
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் *
மட மானை இது செய்தார் தம்மை * மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்! *
கடல் வண்ணார் இதுசெய்தார் காப்பார் ஆரே

(திருநெடுந்தாண்டகம் – 11)

கட்டுவிச்சியைக் கூப்பிட்டு வந்துட்டு, கடல் வண்ணார் இது செய்தார்.  யார் இந்த மாதிரிப் பண்ணியிருக்க இந்தப் பெண்ணை?  மூர்ச்சையாகி விழறாளே, மயக்கமாக விழுந்துட்டாளே.  பட்டுடுக்கும் – இந்த சின்னப் பெண், பரகால நாயகி, பட்டை எடுத்து உடுத்தி உடுத்திப் பார்த்துக்கறாளாம்.  பாவாடை இடுப்புல நிக்கவே மாட்டேங்கறது இன்னும்.  அயர்த்திரங்கும் – ஆனா அந்தப் பட்டைக் கட்டிக்கறதுக்குள்ள ஆயாசம் ஏற்பட்டுக் கீழே விழுந்துடறா.  பாவை பேணாள் – பொம்மை இல்லாட்டா முன்னாடித் தூங்கவே மாட்டா.  இப்போ பெருமான் இல்லேன்னவுடனே என்ன பொம்மை வாங்கிக் குடுத்தாலும் பிடிக்கறதில்லே.  எட்டுணைப் போதென் குடங்கால் இருக்ககில்லாள் – என் மடியிருந்தாத்தான் முன்னாடி என் பெண் தூங்குவள்.  இப்போ என்னமோ தெரியலே, என் மடியிலே அழுத்தி வைச்சாக்கூட தூங்க மறுக்கிறாள்.  மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை – இந்தப் பெண்ணை யார் இப்படி செய்துட்டார்ன்னு கண்டுபிடிக்கறதுக்காகக் கட்டுவிச்சியைக் கூப்பிட்டா.  கட்டுவிச்சிதான் குறத்தி.  அவள் வந்து பார்த்து, யாருமில்லே, கடல்வண்ணார் இது செய்தார்.  கடல் வண்ணன்னா, நாராயணன் கடல் வண்ணனோல்லையோ?  கடல்வண்ணனே பண்ணிட்டா அப்புறம் யார் காப்பாத்துவா?  பூதப்பிரேதங்கள் பிடிச்சிருந்ததுன்னா பகவானிடத்திலே போய்க் கேட்கலாம்.  பகவானே பிடிச்சிண்டு இருக்காரோல்லையோ.  இதிலே யாரும் மாத்தறதுக்கு வழி கிடையாது.  தாயே, நல்லவேளை இந்தப் பெண்ணுக்கு இந்த வியாதி பிடிச்சதேன்னு சந்தோசப் பட்டுக்கோன்னுட்டாள் அவள்.  அப்படியா, வியாதி பிடித்தா துக்கமில்லையான்னா, இது உற்ற நன்னோய் இது தேறினோம்.  இந்த நோய்தான் பக்தின்னு பேர்.  இது வருமா, வருமான்னுதான் பெரிய பாகவதர்களெல்லாம் பிரார்த்திக்கிறார்கள்.  இது உன் பெண்ணுக்குத் தானே வந்துருக்கு.  கவலைப்படாதேன்னு சொல்லிட்டுப் போய்ட்டாள் அவள்.  அதனாலே பத்துப் பாசுரங்களாலே தாய் பாவனையிலேயே பாடி வந்தார்.

முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை * மூவா
மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற *
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
அந்தணனை * அந்தணர் தம் சிந்தை யானை *
விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில் *
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக! என்று *
மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே

(திருநெடுந்தாண்டகம் – 12)

என்று ஆச்சர்யமா தெரிவித்தார்.  ஆக இந்தப் பத்துப் பாசுரங்களூம் தாய் பாவனையோடே பாடினது.  கடைசிப் பத்துப் பாசுரம்தான் மகள் பாவனையோடே பாடினார்.  ரொம்ப அழகான பாசுரம்.

மை வண்ண நறுங்குஞ்சிக் குழல் பின் தாழ *
மகரம் சேர் குழை இருபாடிலங்கி ஆட *
எய் வண்ண வெஞ்சிலையே துணையா * இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் *
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் *
கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே *
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழீ! *
அவரை நாம் தேவர் என்றஞ்சினோமே

(திருநெடுந்தாண்டகம் – 21)

பெருமாள் எப்படியாவது ஆழ்வாரைத் தன் வசப்படுத்திடனும்ன்னு வரனாம்.  ஆனா அவன் என்ன அழகைக் காட்டினாலும் நான் வசப்படறதா இல்லே, என்று பரகால நாயகி சொல்லிக் கொண்டு இருக்கிறாள்.  கடைசில பெருமாள் பாடிப் பார்த்தாராம்.  இவ என்ன பண்ணாலும் வசப்பட மாட்டேங்கறா.  பாட்டுக்குக் கல்லும் இரங்கும், பேயும் இரங்கும்ங்கிறா.  பரகால நாயகி இரங்கமாட்டாளா?  அப்படிங்கறதுக்காக நைவளம் ஒன்றாராயா நம்மை நோக்கா – நைவளம்ன்னா நட்டபாடை நாட்டக்குறிஞ்சி ராகம்.  நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் செய்வளவில் – பெருமான், ஒண்ணும் இந்தப் பெண்ணை ஏமாத்தறதுக்கு முடியலே.  வசப்பட மாட்டேங்கறா.  நாம வேணா அவளுக்குத் தாசன்னு சொல்லிடுவோம், அப்படின்னு அவன் பண்றதுக்குள்ளே, என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய – என் மனசும் கண்ணும் அவனிடத்தில போய்டுத்து தோழி.  இத்தனை நாளும் அவனைப் பார்த்தா திரும்பிப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சிட்டிருந்தேன் பார், நானும் நிறையும் இழந்தேன் – அத்தனையும் பகவானிடத்தில் பறிகொடுத்தேன்னு திருநெடுந்தாண்டகத்திலே சாதித்தார்.  அது கடைசிப் பிரபந்தம் திருமங்கை ஆழ்வாரது.  இருக்கறதுல பிரசித்தி பெற்றதுன்னா சிறிய திருமடல், பெரிய திருமடல்.  இந்த ரெண்டு பிரபந்தமும் திருமங்கையாழ்வார் முழுக்க முழுக்க மடலெடுத்ததே.  நம்மாழ்வாரானும் ஒரு பத்துப் பாசுரத்தில எடுக்கலாமான்னு பார்த்தார்.  ஆனால் திருமங்கையாழ்வார் இரண்டு பிரபந்தங்களாலே.  சிறிய திருமடலாலே,

காரார் வரைக் கொங்கை கண்ணார் கடல் உடுக்கை *
சீரார் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேராற்று *
பேரார மார்வின் பெருமா மழைக் கூந்தல் *
நீரார வேலி நிலமங்கை என்னும் * இப்
பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே * அம்மூன்றும்
ஆராயில் தானே அறம்பொருள் இன்பம் என்று *
ஆரார் இவற்றின் இடை அதனை எய்துவார் *
சீரார் இருகலையும் எய்துவர் * சிக்கென மற்று
ஆரானும் உண்டென்பார் என்பது தான் அதுவும் *
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல் *
ஓராமை ஆமாறது உரைக்கேன் கேளாமே *
காரார் புரவியேழ் பூண்ட தனி ஆழி

ஆழ்வார் எவ்வளவு தைரியமாப் பேசிட்டார் இந்த நாயகி பாவத்திலேன்னா, அறம் பொருள் இன்பம் வீடுன்னு நாலு புருஷார்த்தம்ன்னு சொல்றாளே, பொய்.  வீடுன்னு ஒரு புருஷார்த்தம் கிடையவே கிடையாது.  இருக்கறதே காமம்தான் புருஷார்த்தம்.  அதைத்தான் இந்தப் பிரபந்தத்திலே சொல்றார் ஆழ்வார் இப்போ.  அறம், பொருள், இன்பம், வீடு இல்லே, மூனுதான்.  இப்பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே – புருஷார்த்தம் நாலுன்னு நாம கேள்விப்பட்டிருக்கோம்.  தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்.  ஆனா மோக்ஷத்தையே ஒத்துக்காம, காமமே மோக்ஷம்ன்னு ஆழ்வார் தெரிவிக்கிறார்.  ஏன்னா இது நாயகி பாவனையோட பாடறபடியாலே, வைதிக காமமேதான மோக்ஷமா இருக்கணும்?  லௌகிக காமம் வேணா மோக்ஷமா இருக்காது.  ஆனா ஆத்ம, பரமாத்மாவுக்குள்ள காமம் ஏற்பட்டால், அந்த வைதிக காமமேதான் மோக்ஷமென்று திருமங்கையாழ்வார் இந்த பிரபந்தத்தாலே சாதித்தார்.  இதிலே கடைசில வரிசையா திவ்யதேசப் பட்டியலே படிக்கிறார்.  ஒவ்வொரு திவ்ய தேசமாச் சொல்லி, ஒவ்வொரு திவ்ய தேசத்துக்கும் போயாவது இந்தப் பெருமானை அடைந்தே தீருவேன், என்று சிறிய திருமடலாகட்டும், பெரிய திருமடலாகட்டும், ரெண்டாலயும் திருமங்கையாழ்வார் பாடினார்.  கடைசிப் பிரபந்தமான திருநெடுந்தாண்டகத்தாலே பெருமானோடேயே கலந்தார், அனுபவித்தார்ங்கிறது சரித்திரம்.

இப்போ பராங்குச நாயகியும் சிலது பார்த்திருக்கோம்.  பரகால நாயகியும் சிலது பார்த்திருக்கோம்.  தோழிப்பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம்.  என்ன பாவனையில பாடினா?  சம்பந்தம், உபாயம்.  பகவானுக்கும் நமக்கும் இருக்கிற சம்பந்தம் ஞாபகம் வந்தா தோழிப்பாசுரம்.  ஆறியிருக்கணும், சமாதானத்தோடே இருக்கணும், வரச்சே வருவர்ன்னு தோணினா, தாய்ப்பாசுரம்.  அடைந்து உடனே அனுபவிக்கணும்ன்னு தோணினா, மகள்ப் பாசுரம்.  ஓம், நமஹ, நாராயணாய, இந்த மூன்று சொற்களினுடைய அர்த்தமாகவே ஆழ்வார் இப்படித் தோழிப் பாசுரமாய், தாய்ப் பாசுரமாய், மகள்ப் பாசுரமாய் பாடினார்ங்கிரது சம்ப்ரதாயம். 

(முற்றும்)

-(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)

June 25

நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 4

முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2, பாகம் 3

இரண்டாம் பத்து வந்ததுன்னா, முதல் திருவாய்மொழி,

வாயும் திரையுகளும் * கானல் மட நாராய் *
ஆயும் அமர் உலகும் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் *
நோயும் பயலைமையும் * மீதூர எம்மேபோல் *
நீயும் திருமாலால் * நெஞ்சம் கோள் பட்டாயே

(திருவாய்மொழி 2.1.1)

பெருமானை விட்டுப் பிரிந்த விரகத்திலே ஆழ்வார் துடிக்கிறார்.  விரக தாபத்தை ஆற்றிக்கொள்ள வீட்டை விட்டுட்டு, இங்க இருந்தா ரொம்ப ஞாபகம் வருதுங்கிறதுக்காக வீட்டை விட்டுட்டு தாமிரபரணிக் கரையோரமாப் போனார்.  அவர் திவ்யதேசம் தாமிரபரணிக் கரையிலதான்.  அதனால அங்க போனார்.  சாயங்கால வேளை.  அஞ்சு மணிக்கு வீட்ல விளக்கேத்தி வச்சுட்டார், சாயாங்காலம் அங்க போறார்.  வேகமா ஜலம் ஓடிண்டு இருக்கு.  காத்து அங்கயும், இங்கேயும் ஓடறது.  ஒரு மீன் கிடைக்கற வரைக்கும் நாரை, ஒரு கொக்கு நின்னுண்டு இருக்கு.  அந்தக் கொக்கு வெளுப்பா இருந்ததோல்லையோ, அந்தக் கொக்கைப் பார்த்து ஆழ்வார் கேட்கறார்.  என்னைத்தான் இந்தப் பெருமான் ஏமாத்திட்டார்ன்னா, கொக்கே உன்னையும் ஏமாத்திட்டார் போலருக்கே?  கொக்கு கேட்டது, என்னை என்ன ஏமாத்தினார்ன்னு.  பெருமானையே தெரியாது இந்தக் கொக்குக்கு.  அது ஏதோ வெளுப்பா நின்னுண்டு இருக்கு.  ஏன்னா எப்பவும் நாயகிக்கு நாயகனான பகவானைப் பிரிந்தால் உடம்பு வெளுத்துப் பசலை நோய்ன்னு வரும்.  நீங்க தமிழ் இலக்கியத்தில பார்த்தீள்ன்னா பசலை நோய் காண்பதுங்கிறது முக்கியம்.  அது உடம்பு வெளுத்துப் போய்டும்.  இந்த நாரை உடம்பு வெளுத்திருக்கோல்லையோ, திருமால் இதை வஞ்சிஞ்சிட்டபடியால்தான் இதுக்கு உடம்பு வெளுத்துப் போச்சுன்னு நினைச்சுட்டார் ஆழ்வார்.  நாரை எப்பவுமே வெளுப்பாத்தான் இருக்கும்.  ஆனா அதைப் பார்த்த இவருக்கு என்ன தோண்றது?  நானும் வெளுத்துப் போய்ட்டேன், நாரையும் வெளுத்துப் போச்சு. நாரையோட கழுத்தைக் கட்டிண்டு ‘ஓ’ன்னு அழறார்.  நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே – திருமால் உன்னையும் வஞ்சிஞ்சிட்டார் போலருக்கே.  என்னைத்தான்னு நினைத்தேன், உன்னையுமா வஞ்சித்தான்னு அழுதார்.  பக்கத்துல காத்து வேகமா ஓடிண்டிருந்தது.  காத்தைப் பார்த்துட்டு, நானும்தான் அந்த பகவானை எங்கே எங்கேன்னு தேடி ஓடிண்டிருக்கேன்னா, காற்றே நீயும் தேடி ஓடுகிறாய் போலிருக்கிறது, என்று ‘காற்றும் கழியும் கட்டியழ கொண்ட பெரும் காதலுக்குப் பற்றிய நூல் வரம்பில்லை’ என்று ஒரு நூல் வரம்பு சொல்ல முடியாமல், இன்னதுதான் கிரமம், பக்தி இப்படித்தான் இருக்கும்ன்னு ஆழ்வாரிடத்திலே சொல்லமுடியலே.  இப்போ உபாசனம்ன்னால் ரிஷிகள் இப்படியெல்லாமா அழுவா?  அவாளுக்கு தியானம் தெரியும், உபாசனம் தெரியும், பக்தி தெரியும்.  ஆனா யாரும் காத்தையும், கழியையும் கட்டி அழப் போறதில்லே.  ஆனா இவர் இப்படி அழுகிறாரேன்னு சொன்னா, அது ஞானப்பேச்சைக் காட்டிலும், பிரேமப் பேச்சுக்கு இருக்கற ஏற்றம்.  இதுனால மோக்ஷம் கிடைச்சுடுமா?  தாமிரபரணி ஆற்றங்கரையில போய் நாரை கழுத்தைக் கட்டிண்டு அழுதுண்டிருக்காரே, இதுனால மோக்ஷமான்னு கேட்டால், மேலே சொன்ன ரிஷி மோக்ஷமடைவரான்னு கேட்கணுமே தவிர, இதுல சந்தேகமேபடக் கூடாது.  ஏன்னா ரிஷி ஞானத்தோடே பேசிண்டிருக்கார், அவருக்குண்டானதுதான் கிடைக்குமா, கிடைக்காதான்னு சந்தேகம்.  ஆனால் இங்கே இவர் வேற வழியற்று பக்தி மேலீட்டாலே பேசுகிறபடியால், இதுக்குத்தான் நிச்சயம் மோக்ஷமுண்டுன்னு சொல்லுவர்கள்.

அதனாலே காற்றாகட்டும், நாரையாகட்டும், குருகாகட்டும், இதெல்லாம் இரண்டாம் பத்து ஆரம்பத்துல அழுதார்.  பார்த்ததுக்கு இங்க இருக்கற எல்லாருமே பெருமாளைப் பிரிஞ்சு கஷ்டப்படறா போலருக்கு.  நான் ஒருத்தி மட்டும்தான்னு நினைச்சிண்டிருந்தேன்.  அது இல்லே.  இந்த ஊரிலே தாமிரபரணியும் கஷ்டம்தான் படறது, நாரையும் கஷ்டம்தான் படறது, குருகும் கஷ்டம்தான் படறது.  இதைவிட நாம இருக்கற இடமே தேவலைன்னு தோணிப்போய்டுத்து ஆழ்வாருக்கு.  வீட்டிலே இருக்க வேண்டாம்னுட்டு சாயங்காலம் கிளம்பி வந்தாரோல்லையோ?  மணி பதினோரு மணி.  திரும்பிப் போனார்.  சாயங்காலம் விளக்கேத்தி வச்சது, திரும்பிப் போய் இப்போ விளக்கைத் தொட்டா கொதிக்காதா?  வெங்கல விளக்கு.  தொட்டவுடனே ஒரே கொதிச்சது.  அதைப் பிடிச்சுட்டு அழுக ஆரம்பிச்சுட்டார். நான்தான் ஜுரத்தில கொதிக்கிறேன்னா, நீயும் ஜுரத்திலே கொதிக்கிறே போலருக்கு.  உன்னையுமா பகவான் வஞ்சித்துவிட்டான்னு அதையும் கட்டி அழுதார்.  இது ரெண்டாம் பத்திலே.  இந்த ரெண்டாம் பத்திலேயே தாயார் பாசுரம் ரொம்ப ஆச்சர்யமான பாசுரம். தாய்ப்பாசுரத்தில்,

ஆடியாடி * அகம் கரைந்து * இசை
பாடிப்பாடி * கண்ணீர் மல்கி * எங்கும்
நாடிநாடி * நரசிங்கா! என்று *
வாடிவாடும் * இவ்வாள் நுதலே

(திருவாய்மொழி 2.4.1)

இது பொண்ணு படற பாட்டைக் கண்டு சகிக்காம தாயார் சொல்றது.  ஏனா இந்த நாயகனை விட்டுப் பிரிந்து நாயகி ரொம்பத் துடிக்கிறா.  பார்த்துண்டிருக்கறதுக்கு தாயாரால முடியலே.  பெண்ணே, வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னேனே, கேட்டியா?  ஆறி இருந்திருக்க வேண்டும்.  நீ சமாதானப் பட்டிருக்க வேண்டாமா?  அப்படின்னு பக்கத்து வீட்டுக்காரிக்கெல்லாம் இந்தப் பொண்ணு படற பாட்டை தாயார் சொல்லிக்கிறா.  இவ நினைவோட இருக்கப்போ எப்படி இருந்திருப்போ.  இப்ப நினைவற்று மூர்ச்சையா கிடக்கா, எப்படி இருக்கா, இதைத் தாயார் சொல்லுகிறாள்.  ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி – பகவன் நாமத்தைப் பாடிப்பாடி கண்கள்லேர்ந்து ஜலம் கொட்டக் கொட்ட, எங்கும் நாடிநாடி நரசிங்கா என்று வாடிவாடும் இவ்வாள் நுதலே.  அடுத்த பாட்டிலே, வாள் நுதல் இம்மடவரல் உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் – இம்மடவரவள் உம்மைக் காணும் ஆசையால்தானே நைகின்றாள்.  வேற எதை ஆசைப்பட்டுட்டா?  உம்மைத் தானே ஆசைப்பட்டா.  ஆசைப்பட்டவர் அனுகிரகிக்கறதுதானே ஸ்ரீமந்நாராயணனான உமக்குக் கடமை.  ஆனா இந்தப் பெண்ணை இப்படிப் பண்ணிட்டீரேன்னு தாயார் ரொம்ப வருத்தப்பட்டு பத்துப் பாசுரங்கள்.  இது ரெண்டாம் பத்திலே நடந்தது.

பத்துப் பத்துக்குள்ளே மூன்றாம் பத்தில் மட்டும் நாயகி பாவம் கிடையாது.  நாலாம் பத்தில் ரொம்ப ஆச்சர்யமான பாசுரம் பாடினார்.

ஏறாளும் இறையோனும் * திசைமுகனும் திருமகளும் *
கூறாளும் தனியுடம்பன் * குலம் குலமா அசுரர்களை *
நீறாகும் படியாக * நிருமித்துப் படைதொட்ட *
மாறாளன் கவராத * மணி மாமை குறைவிலமே

(திருவாய்மொழி – 4.8.1)

அதாவது இந்தப் பெண்ணினுடைய வளையல், அவள் நிறம், அவள் மேலங்கி, அவள் போட்டிருந்த அட்டிகை, அவள் போட்டிட்ருந்த மூக்குத்தி, அவள் தலையில போட்டிட்ருந்தது, அவளுடைய அழகு, அவளுடைய நினைவு, இது இத்தனையும் பெருமாள் பறிச்சிண்டு போய்ட்டாராம்.  அதைப் பார்த்து நான் ஒன்னொண்னையும் இழந்துட்டேன், இழந்துட்டேன்னு, இந்தப் பெண் பாடிக்கொள்ளுகிறாள்.  இது ஏறாளும் இறையோனும் பதிகம்.  இதே போல திருமங்கையாழ்வாரும் பாடி இருக்கார்.  அப்புறம் பார்ப்போம்.  ஏறாளும் இறையோனும் பதிகம் முழுக்க, தான் ஒன்னொண்னையும் இழந்துட்டெங்கிறதைத் தெரிவித்தார்.  அதிலே ரொம்ப ஆச்சர்யமான பதிகம்ங்கிறது, கீழே சொன்னேனோல்லையோ, என்றோ நடந்ததை இன்னைக்கு நடந்ததா நினைச்சுனுடறாள்ன்னுட்டு.  பக்கத்திலே தன்னுடைய மண்ணைத் துழாவி துழாவிப் பார்க்கிறா.  இதுவும் தாயார் சொல்றது இப்போ.  ஆழ்வார் திருநகரியிலே உட்கார்ந்துட்டிருக்கார் நம்மாழ்வார்.  அவர் தான் ஊர் மண்ணைத் துழாவுறாராம்.  துழவிப் பார்த்துட்டு இதுதான் வாமனன் அளந்த மண்ணுங்கிறார்.  அது நடந்தது கிருத யுகத்திலே. ஆழ்வார் இருக்கறது துவாபரயுகம் முடிஞ்சு, கலியுகத்தின் ஆரம்பத்திலே.

மண்ணை இருந்து துழாவி *
வாமனன் மண்ணிதென்னும் *
விண்ணைத் தொழுதவன் மேவு *
வைகுந்தம் என்று கை காட்டும் *
கண்ணையுண்ணீர் மல்க நின்று *
கடல் வண்ணன் என்னும் அன்னே! * என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு *
என்செய்கேன் பெய் வளையீரே

(திருவாய்மொழி – 4.4.1)

ஆகாசத்தைப் பார்த்துட்டு இதுதான் ஸ்ரீவைகுண்டம், தெரியாதா, அப்படின்னு கைகூப்பிக்கிறாளாம்.  பக்கத்தில இருக்கற மண்ணைத் துழாவித் துழாவி பார்த்துட்டு வாமனன் அளந்த மண் இதுதான்கிறாளாம்.  இதோட எல்லாம் இல்லே.  இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு பைத்தியம் பிடிச்சுடுத்தோ தெரியலே.  அங்க ஓடிண்டிருக்கு ஒரு கன்னுக்குட்டி.  கன்னுக்குட்டியைக் கெட்டியா கட்டிப்பிடிச்சிண்டு கண்ணன் மேய்த்த கன்னுக்குட்டி இதுதாங்கிறா.  பாம்பு ஒன்னு ஓடிண்டிருக்கு.  அது பின்னாலயே ஓடி கண்ணன் சயனிச்சிண்டிருக்கற ஆதிசேஷன் இதுதான்னு சொல்றா.  யாராவது குழல் ஊதிட்டுப் போனா, பகவானே குழல் ஊதுறான்னு சொல்லும்.  எங்கேயாவது வெண்ணையைப் பார்த்தா பகவான் சாப்பிட்ட வெண்ணை இதுதான்னு சொல்றா.  இப்படி ஏறிய பித்தினோட என் பெண்ணோட நான் படறது போறலே, இதை எப்படித் தீர்க்கப் போகிறேன்னு தெரியலேன்னு தாயார் பக்கத்து வீட்டுக்காரியினிடம் சொல்லிக் கொள்ளுகிறாள்.  இதுவும் நாயகி பாவத்திலே நாலாம் பத்திலே பாடினதுதான்.

ஐந்தாம் பத்திலே பல பதிகங்கள்.  இதிலேதான் மடலெடுத்தார் ஆழ்வார்.  மடலெடுப்பதில் தமிழர்களுக்கு ஒரு மரபு, சம்ஸ்கிருத இலக்கியத்துக்கு ஒரு மரபு.  தமிழ் இலக்கியத்திலே என்னதான் இருந்தாலும் பெண் மடலெடுக்க மாட்டாள்.  ஆண்தான் மடலெடுக்கலாம்.

கடலென்ன காமத்தராயினும் மாதர் மடலூரார்
மற்றையார் மேல்.

கடல் போன்ற காமம் இருந்தாலும் பெண்கள் மடல் ஊர மாட்டார்கள், ஆண்கள்தான் மடலூருவார்கள்ங்கிற்து தமிழர் மரபு.  ஆனால் சம்ஸ்கிருத இலக்கியத்திலே ஸ்திரீ மடலெடுக்கறது, புருஷன் மடலெடுக்கறது ரெண்டுமே ஏத்துக்கறா.  இதுனால திருமங்கையாழ்வார் சிறிய திருமடல், பெரிய திருமடல் ரெண்டு பாடினார்.  அவர் ஒரு பாட்டில சொல்லிட்டார்.  நாங்கள் கண்டிப்பா வடநெறியே வேண்டினோம், தென்னெறி இதுக்கு வேண்டாம்னுட்டார் அவர்.  ஏன்னா தென்னெறிங்கறது தமிழ் பாஷைப் படியோல்லையோ?  தென்னெறிப்படி நான் பாட்டுப் பாடறதா இல்லே.  அப்படின்னா இவர் பெண். பெண் பாவனையிலே மடலெடுக்கறது கூடாது, தமிழ் இலக்கியத்தின்படி.  ஆனா சம்ஸ்கிருத இலக்கியத்தின்படி பெண் பாவனையிலே மடலெடுக்கலாம்.  மன்னு வடநெறியே வேண்டினோம் – நான் இந்தப் பிரபந்தம் பாடற வரைக்கும் சம்ஸ்கிருதனாகவே பாடிட்டுப் போறேன்னுட்டார்.  மடலெடுக்கறது தமிழ்லதான்.  ஆனா தான் நினைச்சிண்டிருக்கறது சம்ஸ்கிருத இலக்கியத்தின்படியே பாடுவேன்னு சாதித்தார்.  என்னத்துக்காக இப்படி நடக்கறதுன்னு சொன்னா, சாதாரணமா லோகத்தில இருக்கற பெண்களெல்லாம் மடலெடுக்கறது இல்லையே.  ஆனா ஆழ்வார்கள் நாயகி பாவத்திலே மடலெடுத்திருக்காளே?  என்ன வித்தியாசம், மரபை மீறலாமாங்கிற சந்தேகம் வரும்.  மரபை மீறுவதற்கு ஒரு காரணமுண்டு.  லோகத்துப் பெண்கள் மடலெடுக்கறதெல்லாம் யாரைப்பத்தி?  ஏதோ ஒரு புருஷனைப்பத்தி.  இங்கிருக்கற யாரையோ பத்தித்தானே மடலெடுத்தாகனும்?  இவாளுக்கெல்லாம் அவ்வளவு பெருமை இல்லே, மடலெடுக்க வைக்கிற அளவுக்கு.  நாயகனுக்கு அத்தனை பெருமை இருந்தா பெண் மடலெடுக்கலாம்.  ஒன்னும் இல்லே அந்த மாதிரி, அதனாலே யாருக்கும் மடலெடுக்கறதில்லே.  ஆனா ஸ்ரீமந் நாராயணன் அப்படியா?  பார்த்தவுடனே மடலெடுக்க வைக்கிறானோல்லையோ?  அதனாலதான் பரகால நாயகியோ, பராங்குச நாயகியோ மடலெடுத்தார்கள்.  இது லௌகீக விஷயமாயிருந்தா புரியாது.  இது பகவத் விஷயமா இருக்கிறபடியாலே பெண் மடலெடுத்தலும் கூடும்ன்னு வைத்துக் கொள்ள வேண்டும்.

இதைத்தான் ஐந்தாம் பத்தில், மூன்றாம் திருவாய்மொழியில்,

மாசறு சோதி * என் செய்யவாய் மணிக்குன்றத்தை *
ஆசறு சீலனை * ஆதி மூர்த்தியை நாடியே *
பாசறவெய்தி * அறிவிழந்தெனை நாளையம் *
ஏசறு மூரவர் கவ்வை * தோழீ! என் செய்யுமே

(திருவாய்மொழி – 5.3.1)

எத்தனை நாட்களாக அறிவிழந்து கிடந்தேன்.  இந்தப் பெருமானை எப்படியாவது அடைஞ்சுடனும்ன்னு மடலெடுக்கத் தொடங்கினாள்.  அதிலேர்ந்து மூன்று பதிகம், மடலெடுக்கறதுக்காக ஆரம்பிச்சார்.  சாயங்காலம் வந்துடுத்து.  ராத்திரியாயிருந்து மடலெடுத்து என்ன லாபம்?  யார் பார்ப்பா?  அதனால நிறுத்தினுட்டார்.  மறுபடியும் மகள் பாசுரம்தான்.

ஊர் எல்லாம் துஞ்சி * உலகெல்லாம் நள்ளிருளாய் *
நீர் எல்லாம் தேறி * ஓர் நீள் இரவாய் நீண்டதால் *
பார் எல்லாம் உண்ட * நம் பாம்பணையான் வாரானால் *
ஆர் எல்லே! வல்வினையேன் * ஆவி காப்பார் இனியே

(திருவாய்மொழி – 5.4.1)

இந்த ஆவியை இனிமே யாரு காக்கப் போறார்ன்னு தெரியலே.  ராத்திரி வந்துடுத்து.  கண்ணனும் வாரானால், காகுத்தனும் வாரானால் – கண்ணன் இரட்சிக்கறதுக்கு வரலே, காகுத்தன் இரட்சிக்கறதுக்கு வரலே.  இனிமே நான் முடிஞ்சு போய்ட வேண்டியதுதான் போலருக்குன்னு ஐந்தாம் பத்திலே நாலாம் திருவாய்மொழி பாடினார்.  அதுக்கடுத்ததும் மகள் பாசுரம்தான்.  ரொம்ப ஆச்சர்யமான பாசுரம், திருக்குறுங்குடி நம்பிக்காக.  திருக்குறுங்குடி நம்பியை நினைத்தே பத்துப் பாசுரங்கள் பாடினார்.

எங்ஙனேயோ அன்னைமீர்காள்! * என்னை முனிவது நீர் *
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை * நான் கண்டபின் *
சங்கினோடும் நேமியோடும் * தாமரைக் கண்களோடும் *
செங்கனி வாய் ஒன்றினோடும் * செல்கின்றதென் நெஞ்சமே

(திருவாய்மொழி – 5.5.1)

என் நெஞ்சம் என்னிடத்திலே இல்லை.  அன்னைமீர்காள், எனக்கு நீங்க உபதேசிக்காதீங்கோ.  அவள் பார்த்து இரு, இரு, ஆறியிருங்கறாளோல்லையோ?  இது எதுக்கு என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீள் நீங்க இப்போ?  சொன்னா காது எங்கிட்ட இருக்கணும், சொல்லணும்.  மனசு எங்கிட்ட இருக்கணும், சொல்லணும்.  இந்த மனசும், செவியும், கண்ணும் என்றோ நம்பி பின்னே போயிற்று.  நீங்கள் சொல்றது எதுவும் என் காதிலே ஏறப்போறது கூட கிடையாது.  நீங்கள் உங்கள் கோணத்திலேயே பார்க்கிறேளே தவிர, இந்த பாட்டிலே சொல்றார் பாருங்கோ.

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் * என்னை முனியாதே *
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை * நான் கண்டபின் *
மின்னும் நூலும் குண்டலமும் * மார்வில் திருமறுவும் *
மன்னு பூணும் நான்கு தோளும் * வந்தெங்கும் நின்றிடுமே

(திருவாய்மொழி – 5.5.2)

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் – எந்தப் பொண்ணும் இதைத்தான் முதல்ல சொல்லும்.  என் கோணத்திலேர்ந்து பாருங்கோ.  நீங்க உங்க வயசானவா கோணத்திலேர்ந்தே பார்த்திட்டு இருந்தேள்ன்னா, நாங்க என்ன சொல்றோம்ன்னு பாருங்கோன்னு பொண்ணு சொல்றதோல்லையோ?  இது இன்னைக்கில்லே இவா சொல்றது.  5108 வருஷத்துக்கு முன்னாடி ஆழ்வார் பாடினார்.  ஆனா வித்தியாசம், இது லௌகீகம், அது வைதீகம்.  என் நெஞ்சத்திலேர்ந்து பாருங்கோ.  பகவானிடத்திலே நெஞ்சம் போய்ட்டதுனாலே இனி நீங்க சொல்றது கேட்காதுனுட்டு, ரொம்ப ஆச்சர்யமான பத்துப் பாசுரம், திருக்குறுங்குடி நம்பிக்கு.  திருக்குறுங்குடி நம்பி பெருமானே அழகு.  அந்தப் பெருமானேதான் பராங்குச நாயகியாகப் பிறந்ததாக ஐதீகம்.  ஏன்னா ஆழ்வாருடைய தாயாரும், தகப்பனாரும் திருக்குறுங்குடி நம்பிகிட்டதான் போய் பிரார்த்திச்சிண்டா, நமக்கு குழந்தைப் பேறில்லே, வேணும்ங்கிறதுக்காக.  உடைய நங்கையார், காரி, இவா ரெண்டு பேரும் போய் நம்பியினிடத்திலே கேட்கறா.  யாரைப் போல பிள்ளை வேணும்ன்னு திருக்குறுங்குடி நம்பி கேட்கறார்.  சட்டுன்னு தாயார், உன்னைப் போல வேணும்ன்னார்.  நம்பி யோசித்தார், என்னைப் போல உலகத்திலே யாரும் இல்லே.  நானே பொறந்தாத்தான் உண்டு.  என்னைப் போல இன்னொருத்தர் இருந்தா நான் அனுப்பிச்சு வைக்கலாம்.  இருக்கறது நாம். அதனால நாமே பராங்குச நாயகியாகப் பிறப்போம்ன்னு நம்மாழ்வாராகப் பிறந்தார்ன்னு ஐதீகம்.  அந்த எம்பெருமானுக்காக ஐந்தாம் பத்தில் ஐந்தாம் திருவாய்மொழி பாடினார்.  அப்போ 5.3, 5.4, 5.5 மூன்றுமே நாயகி பாவத்திலே பாடினதுதான்.

அதுக்கு அப்புறம் ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி வந்தது.  அதுலதான் அனுகாரம் பண்றார்.  அனுகாரம்ன்னா பெருமாளாவே தன்னை நினைச்சினுடுவார்ன்னு பார்த்தோமே.  அப்படியாவது பிரிவாற்றாமையைக் குறைச்சுக்கலாமாங்கிறதுக்காக.

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் *
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் *
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் *
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் *
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் *
கடல் ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ *
கடல் ஞாலத்தீர்க்கிவை என் சொல்லுகேன் *
கடல் ஞாலத்தென் மகள் கற்கின்றவே

(திருவாய்மொழி – 5.6.1)

இது தாய்ப் பாசுரம்.  தாய்ப் பாசுரம்ன்னா, தாயார் மகளைப் பார்க்கிறா.  மகள் இப்படிக் கை வைச்சிண்டு உட்கார்ந்தாளாம்.  நாந்தான் உலகத்தை எல்லாம் சிருஷ்டிச்சேன், நாந்தான் உலகத்தை எல்லாம் அழிச்சேன், நாந்தான் உலகத்தை எல்லாம் காக்கிறேன்னா, இவளுக்கு பயம் இப்போ.  ஓ, பொண்ணுக்கு என்ன புடிச்சுடுத்தோ தெரியலையே இப்போ.  ஏன்னா இவ சிருஷ்டித்தேன், இவ அழிச்சேன்னா, ஏன்னா இதெல்லாம் பெருமாள் பண்றதுன்னான்னா, அப்போ அவனாகவே தன்னை நினைத்துக் கொண்டு பெண் பாடறா.  அப்படிப் பெண் கஷ்டப்படறாளே, பாடறாளேங்கிறதைத் தாயார் சொல்லிக்கிறா இப்போ.  ஏன்னா பாட்டில என்ன இருக்கு?  கடல் ஞாலம் செய்தேனும் யானே, என்னும் - இந்த ‘என்னும்’ன்னு சொன்னா, மகள் சொல்றதா தாய் சொல்றான்னு அர்த்தம்.  கடல் ஞாலம் செய்தேனும் ஞானே – இது மகள் சொல்லுவள்.  என்னும் – தாய்ப் பாசுரம்.  இந்த ‘என்னும்’ எங்க வந்தாலும் அப்ப அங்க தாயார் பாடறாள்ன்னு அர்த்தம்.  ஏன்னா மகள் முதல் வரி வரைக்கும் சொல்லியிருப்போ.  மேற்கொண்டு தாயார் அனுவாதம் பண்ணுகிறாள்.  இப்படி அந்தப் பத்துப் பாசுரங்களிலேயும் பகவானாகவே தம்மை நினைத்துக் கொண்டு நம்மாழ்வார் பாட, அதை தாய் பாவனையிலே வெளியிட்டார்.  இது ஐந்தாம் பத்திலே நடந்தது.

(தொடரும்)

-(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)

நாலாயிரத்தில் நாயகி பாவனை – பாகம் 3

முந்தைய பாகங்கள் – பாகம் 1, பாகம் 2

பராங்குசர் தூதுவிடுதலுக்குன்னு நான்கு பதிகங்கள் பாடினார்.  ஆழ்வார்கள் பறவைகளைத் தூதுவிடுகிறார்கள்.  அப்படின்னா என்னன்னு பார்ப்போம்.  இப்போ இத்தனை நாழி நாயகி பாவம்ன்னு பார்த்ததெல்லாம் பிரேமப் பேச்சுன்னு பார்த்தோமோல்லையோ?  எல்லாத்துக்குமே உள்ளுறைப் பொருள் உண்டு.  உள்ளுறைப் பொருள்ன்னா ‘ஸ்வாபதேசம்’ன்னு சம்ப்ரதாயத்திலே சொல்லுவா.  மேலெழுந்தவாரியாப் பார்த்தா ஒரு அர்த்தம்.  ஆனா அதுக்கு உள்ளூர பார்த்தோம்ன்னா ஆத்ம, பரமாத்ம விஷயமா ஒரு அர்த்தம்.

தோழிப்பாசுரம், தாய்ப்பாசுரம், மகள்ப் பாசுரம்ன்னு பார்த்தோமோல்லையோ?  இதிலே மகள் எப்போ பாடுவள்?  விரகத்திலே பாடுவள்.  உடனே நாயகனை அடைஞ்சுதான் தீர வேண்டும்ங்கிற துடிப்பு இருந்தா மகள் பாடப் போறா.  தாயார் என்ன சொல்லுவள்?  மகளே, இது உனக்கு ஆகாது.  எந்தத் தாயாராயிருந்தாலும் அதுதானே சொல்லப்போறா?  இது எப்போ துடிக்கும் போதும், மகளே இது என்னத்துக்கு உனக்கு?  அவசரப்படாதே, ஆறியிரு, தானே நல்ல கல்யாணமா நடக்கும்.  இது அவள் சொல்லப் போறா.  தோழி என்ன பண்ணுவள்?  நாயகனும், நாயகியும் சந்திக்கறதுக்கு ஏற்பாடு பண்றதே அவதான்.  இது தோழியினுடைய வேலை.  அப்போ தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம்.  மகள், பகவானை அடைந்தே ஆகவேண்டும்ங்கிற பதற்றப்படுமவள்.  தோழி, பகவானை சந்திப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வைக்குமவள்.  தாயார், ஆறியிரு, அவசரப்படாதேன்னு சமாதானம் சொல்லுபவள்.  இந்த மூன்று பாசுரத்தையும் நாம இப்போ நம்மாழ்வார் பாசுரத்திலேயே பார்த்துடலாம்.  இதுக்கு 27 திருவாய்மொழிகள் பாடினார்.  மொத்தம் 100ன்னு பார்த்தோம்.  அந்த 100க்குள்ளே, 27 பதிகங்கள், ஒரு பதிகம்ங்கிறது ஒரு திருவாய்மொழி, ஒரு பதிகம்ங்கிறது 11 பாசுரம்.  அதிலே 27 பதிகங்களாலே ஆழ்வார் நாயகி பாவத்தோடேயே பாடியிருக்கார்.  அதிலே 3, தோழிப் பாசுரத்துக்காக.  7, தாய்ப் பாசுரத்துக்காக.  17, மகள் பாசுரத்துக்காக.  மொத்தம் 27 பதிகங்கள் பெண் பாவனையிலே பாடினார்.  73 பதிகங்கள் ஆண் பாவனையிலே பாடினார்.

இது என்ன பெரியோர்களெல்லாம் சொல்லியிருக்கான்னா, இது வெறும் நாயகி பாவம் அல்ல.  ‘சம்பந்த, உபாய, பலங்களில், உணர்த்தி, துணிவு, பதற்றமாகிற ப்ரக்ஞாவஸ்தைகளுக்கு, தோழி, தாயார், மகள் என்று பேர்’.  இது சூத்திரம்.  தோழி, தாயார், மகள் – இந்த மூன்றுமே ஆழ்வாரினுடைய அறிவின் வெவ்வேறு அவஸ்தை.  ஆழ்வார் ஒருத்தர்தான், அவர் ஆள் மாறிடப் போறதில்லே இப்போ.  அப்போ மனசு மட்டும்தானே மாறது.  தன்னுடைய நினைவு என்னவோ, நினைவின் மாறுதலாலே தன்னையே நாயகியா நினைச்சுக்கறார்.  அந்த மாதிரி நினைச்சுனுட முடியுமான்னு நமக்குத் தோணும்.  இதுல ஒரு முக்கியமான உண்மை புரிஞ்சு போச்சுன்னா ஆழ்வார்களாலே எப்படி முடியறதுன்னு புரிஞ்சுனுடலாம்.  வேதாந்தம் என்ன சொல்லுகிறதுன்னா, ஸ்ரீமந் நாராயணன் ஒருத்தர்தான் புருஷன்.  அவனைத் தவிர மத்த ஆத்மாக்கள் அத்தனை பேரும் ஸ்திரீகள்தான்.  ஆத்மாக்கள் அத்தனை பேரும் பத்தினிகள், புருஷோத்தமன் ஒருத்தன்தான் பர்த்தா.  இதுனாலதான் எப்போ கல்யாணம் பண்ணிக் குடுக்கறாச்சேவும் மந்த்ரத்திலே என்ன தெரியுமா ஆரம்பிப்பா?  இந்தப் பிள்ளை பேரச் சொல்லியே குடுக்க மாட்டார்.  மாமனார் பொண்ணைக் குடுக்கறச்சேவே, விஷ்ணு ரூபாய வராய, விஷ்ணு ரூபத்தில இருக்கற இந்த வரனுக்கு என் பெண்ணைக் குடுக்கிறேன்.  ஒருத்தர் வேடிக்கையாச் சொன்னார், இல்லேன்னா இந்தப் பிள்ளையைப் பார்த்தா யார் பொண்ணு குடுப்பா இப்போ.  ஏதோ விஷ்ணு உட்கார்ந்திருக்கார்ங்கிற நம்பிக்கையிலதான் பொண்ணையே மாமனார் பண்ணிக் குடுக்கிறார் இப்போ.  விஷ்ணுவே இங்க இருப்பராம்.  இந்தப் பிள்ளை ரூபத்தில இருந்து விஷ்ணு கல்யாணம் பண்ணிக்கனுமாம்.  ஏன்னா கல்யாணம்ங்கிறதே விஷ்ணுதான் பண்ணிக்கனும்.  திவ்யதேசத்திலெல்லாம் ‘நித்ய கல்யாணப் பெருமாள்’ன்னு கேள்விப்பட்டிருக்கீளோல்லையோ?  அதைப் போலே எந்த ஆத்மாவா இருந்தாலும், விஷ்ணுவுக்குத்தான் பத்தினி.  அப்போ மொத்தப் பேருமே பெண்தான்.  நமக்குப் பெண் தன்மைங்கிறது புதுசு அல்ல.  சரீரத்திலே சில பேர் பெண் தன்மையோடு இருக்கலாம், சில பேர் ஆண் தன்மையோடு இருக்கலாம்.  ஆனா ஆத்மான்னு பார்த்தா மொத்தப் பேருமே பெண்தான்.  இந்த ப்ரக்ஞை ஆழ்வாருக்கு வந்துடுத்து, நமக்கு வரலை.  அவ்வளவுதான் சொல்லணுமே தவிர, அவருக்கு அந்த உண்மை புரிஞ்சு போய்ட்டபடியால தன்னை நிஜமாகவே பெண்ணா நினைச்சுனுட்டார்.  நமக்கு அந்த உண்மை புரியாததால நாம என்னமோ ஆண், அப்படின்னு நினைச்சிண்டு நாம வாழ்ந்துண்டிருக்கோம்.

அப்போ பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கு உள்ள தொடர்பைத்தான் இந்த இடத்தில பார்க்கப் போறோம்.  அதிலயே எப்படித் தாயார், எப்படி மகள், எப்படி தோழின்னு பார்க்கணும்.  ’சம்பந்த, உபாய, பலங்களில், உணர்த்தி, துணிவு, பதற்றமாகிற ப்ரக்ஞாவஸ்தைகளுக்கு, தோழி, தாயார், மகள் என்று பேர்’ப்ரக்ஞா – நம்முடைய சிந்தனா, ஸ்மிருதி, நினைவு, ஞானம் இதுக்குத்தான் ப்ரக்ஞான்னு பேர்.  ஆழ்வாருடைய வெவ்வேற ப்ரக்ஞைகள், ஆழ்வாருடைய வெவ்வேற தசைகள், வெவ்வேற நினைவின் ஓட்டங்கள், அந்த நினைவு வரச்சேவெல்லாம் தான் அவராகவே நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில ஏதோ ஒரு நினைவு முதிர்றது, மகளா நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில வேற ஏதோ ஒரு நினைவு முதிர்ச்சி அடைகிறது, தாயா நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில வேற ஏதோ ஒரு நினைவு முதிர்ச்சி அடைகிறது, தோழியா நினைச்சுனுடறார்.  அவர் உள்ளத்தில வேற ஏதோ ஒரு நினைவு ஏற்படுகிறது, ஆணாகவே பாடிடுறார்.  ஆக மொத்தத்தில நினைவின் மாறுதலாலேதான் வெவ்வேற தசைகளை அவர் அடைகிறார்.  அந்த மாதிரிகூட முடியுமான்னு கேட்டா, இப்போ நான் இருக்கேன்னு வச்சுக்கங்கோ.  என்னைப் ‘பிள்ளை’ன்னு சொல்லிக்கலாமா?  எங்க அப்பாவுக்கு நான் பிள்ளைங்கறதாலே.  என்னைத் ‘தகப்பன்’னு சொல்லிக்கலாமா?  என் பிள்ளைக்கு நான் தகப்பன்ங்கிறதாலே.  என்னைக் ‘கணவன்’னு சொல்லலாமா?  என் மனைவிக்கு நான் கணவனானபடியாலே.  அப்போ நாயகன் மூணு பேரா?  நான் ஒருத்தனா, இல்ல மூணு பேரா இப்போ?  நான் மூணு பேரில்லே, ஒருத்தன்தான்.  ஆனா இந்த மனைவியோடே சம்பந்தப்படுத்தி பார்க்கறச்சே நான் பர்த்தா.  பிள்ளையோடே சம்பந்தப்படுத்திப் பார்க்கறச்சே நான் தகப்பன்.  தகப்பனோட சம்பந்தப்படுத்திப் பார்க்கறச்சே நான் பிள்ளை.  அப்போ என்னுடைய நினைவிலேயே என்னால மூணா இருக்க முடியறதோல்லையோ?  இது எல்லாமே ப்ரக்ஞையின் மாறுதல்கள்.  அதைப்போல நம்மாழ்வாருக்கும் மூணு ப்ரக்ஞை ஏற்படறது.

நீங்க திருமந்திரம்ன்னு கேள்விப் பட்டிருப்பீள்.  ‘ஓம் நமோ நாராயணாய’ங்கிற எட்டெழுத்து இருக்கோல்லையோ, ஆச்சார்யனிடத்திலே சமாஸ்ரயணம் பண்ணிக் கொண்டு, பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிக்கொள்ளும் போது, ஆச்சார்யன் சொல்லிக் குடுக்கறது அது.  அதிலே மூன்று பதங்கள் இருக்கா?  ஓம், நமஹா, நாராயணாய, அப்படின்னு மூன்று பதங்கள்.  இது மொத்தம் எட்டெழுத்து.  ஓம்ங்கிறது ஓரெழுத்து. நமஹாங்கிறது ரெண்டெழுத்து.  நாராயாணாயங்கிறது ஐந்தெழுத்து.  இதிலே முதல் பதத்தை வாசிக்கறச்சே நமக்கு ஒரு அறிவு வரும்.  ரெண்டாம் பதத்தை வாசிக்கறச்சே ஒரு அறிவு வரும்.  மூன்றாம் பதத்தை வாசிக்கறச்சே ஒரு அறிவு வரும்.  ஆழ்வாருக்கு என்ன ஆச்சர்யம் தெரியுமா?  முதல் பதமான ’ஓம்’மை வாசிக்கறச்சே அவருக்குத் தோழியாத் தோணிடும்.  ‘நமஹா’ங்கிற ரெண்டாம் பதத்தை வாசிக்கறச்சே தாயாகப் பாடிடுவர்.  ‘நாராயணாய’ங்கிற மூன்றாம் பதத்தின் அர்த்தம் தெரியறச்சே மகளாப் பாடிடுவர்.

என்ன ஸ்வாமி, எங்கயோ சம்பந்தமில்லாத.  இத்தனை நாழி ஏதோ தோழி, தாயார், மகள்ன்னு நாயகி பாவம் பார்த்திண்டிருந்தோம்.  திருமந்திரத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இப்போ?  அது வெறும் ஞானமான்னா இருக்கும் திருமந்திரம்?  இது ப்ரேமமாச்சேன்னா.  ஞானம் முற்றினாத்தான் ப்ரேமம்ன்னு முதல்லயே சொல்லியிருக்கேன்.  ஞானமும் உண்டு, ப்ரேமமும் உண்டு.  ‘ஓம்’ங்கிற அர்த்தத்தில நாம என்ன புரிஞ்சுக்குறோம்ன்னா, பகவானுக்கும் நமக்கும் உண்டான சம்பந்தம் தெரியும்.  அவருக்கும் நமக்கும் நெருங்கின சம்பந்தம் உண்டான்னா, நெருங்கின இல்லே.  அவரில்லாம நாம இல்லே, நாம இல்லாம அவர் இல்லே.  நம்ம ஒரோருத்தருக்குள்ளேயும் பெருமான் நீக்கமற நிறைந்திருக்கிறானோல்லையோ?  அந்த அளவுக்கு பெருமானுக்கும் நமக்கும் நெருங்கின தொடர்பு உண்டு.  அதனாலே இந்த இடத்திலே, அவனுக்கும் நமக்கும் உண்டான சம்பந்தத்தை ஆழ்வார் அவ்வப்போது தெரிந்து கொள்ளுகிறார். 

ஓம்காரத்திலே யாருக்கும், யாருக்கும் உண்டான சம்பந்தம் தெரியும்ன்னால், ‘அ’காரத்துக்கும், ‘ம’காரத்துக்கும் உண்டான சம்பந்தம் தோன்றும்.  ஓம் என்பதை நீங்கள் பிரித்தால், ‘அ’, ‘உ’, ‘ம’ என்று மூன்றாகப் பிரியும்.  அ, உ சேர்ந்ததுன்னால், ‘ஓ’ என்று ஆகும்.  ‘ம’ சேர்ந்ததுன்னால், ‘ஓம்’ என்று ஆகும்.  இதிலே ‘அ’ என்பது பரமாத்மாவைக் குறிக்கும்.  ‘ம’ என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.  ‘அ’வுக்கும், ‘ம’வுக்கு உண்டான சம்பந்தம், இந்த சம்பந்தத்தைத்தான் ஓம்காரமே சொல்லும்.  பகவானுக்கும் ஜீவாத்மாவுக்கும் உண்டான சம்பந்தத்தை ‘ஓம்’ங்கிற பிரணவம் சொல்லிடும்.

அடுத்து, ’நமஹா’ – மஹா, ம், ந, மம.  சம்ஸ்கிருதத்திலே அஸ்மத் சப்தம்ன்னு பேர்.  அஸ்மத் சப்தத்திலே, அகம் ஆவாம்யயம், நான் என்னைப்பற்றி சொல்லிக் கொள்ளுவது.  ’மஹா’ன்னு சொன்னா ‘என்னுடையது’ன்னு அர்த்தம்.  ‘மம’ன்னு சொன்னாலோ, ‘மஹா’ன்னு சொன்னாலோ, ‘என்னுடையது’.  ம் – நான், ந – அல்லேன்.  நான் என்னுடையவன் அல்லேன்.  நான் பகவானுடையவன், இப்படிங்கிற ஞானத்துக்காக ஏற்பட்டதுதான் ‘நமஹா’.  அப்போ நமஹாங்கிற சப்தத்திலே இருந்து நாம தெரிஞ்சுக்கறது, நான் என்னுடையவன் அல்லேன், அவருடையவன்.  அவர் பார்த்து எப்போ இரட்சிக்கிறாரோ அப்போ இரட்சிக்கட்டும், இப்படி இருக்கறது நமஹாங்கிற சப்தத்தினுடைய அர்த்தம்.

நாராயணாய-ன்னு சொல்றது, நான் நாராயணனுக்கு உரியவன்.  எல்லா நேரத்திலேயும், எல்லா காலத்திலேயும் அவருக்குக் கைங்கர்யம் பண்ணிண்டே இருக்கணும்.  இது நாராயணாயங்கிற சப்தத்தினுடைய அர்த்தம்.

அப்போ பெருமானுக்கும் எனக்கும் சம்பந்தம் உண்டுன்னு பிரணவத்தில தெரிஞ்சிண்டோம்.  அவர்தான் என்னை இரட்சிக்கணும், நானா முயற்சி எடுக்க வேண்டிய தேவை இல்லே, இது நமஹாங்கிற சப்தத்திலே இருந்து தெரிஞ்சிண்டோம்.  நான் அவரை அடைஞ்சு அனுபவிக்கணும், கைங்கர்யம் பண்ணனும், இதை நாராயணாயங்கிறதில இருந்து தெரிஞ்சிண்டோம்.  இப்போ இந்த மூன்று நிலைகள்தான் ஆழ்வாருக்கு மூன்று பாவனை.  பெருமானுக்கும் தனக்கும் இருக்கிற சம்பந்தம் ஞாபகம் வந்தால், தோழியாகப் பாடிடுவர்.  பெருமானேதான் இரட்சிக்கணும், நாம பண்றதுக்கு ஒன்னுமில்லேங்கற நம்பிக்கை வந்தால், தாயாரா பாடிடுவர்.  பெருமானை உடனடியா அடைஞ்சு அனுபவிக்கணும்ன்னு இருந்தா, மகளாப் பாடிடுவர்.  அப்போ திருமந்திரத்தில இருக்கற மூன்று பதங்கள், அதைப்பற்றின ஞானம் எப்பப்போ ஆழ்வாருக்கு ஏற்படறதோ, அதற்கேற்றாப்போலே இந்த மூன்று பாவனைகள்.  இப்போ சம்பந்த ஞானம் ஓம்காரத்திலே இருந்து வருதாதோழி என்ன பண்ணுவள்ன்னு சொன்னேன்?  நாயகியும், நாயகனும் சந்திக்கறதுக்கு அவள்தானே ஏற்பாடு பண்ணிக் குடுக்கிறா?  உனக்கும், அவனுக்கும்தான் தொடர்புன்னு அவள்தானே சொல்லிக் குடுக்கிறா?  அப்போ அந்த பாசுரமா ஆழ்வார் பாட ஆரம்பிச்சுருவர்.  ஓம்காரத்திலெ பெருமானுக்கும், நமக்கும் இருக்கிற சம்பந்தம் இருக்கு.  ஆழ்வாருக்கு அது ஞாபகம் வரச்சே, சந்திக்கணும்ன்னு தோன்றது.  சந்திக்கறதுக்கு ஏற்பாடு பண்ற தோழியாப் பாடிடுவர்.  அடுத்து ‘நமஹா’ங்கிறது நன்னா மனசுல பட்டா, நாம போகவே கூடாதே, ஆறித்தானே இருக்கணும், அடங்கித்தானே இருக்கணும்ன்னா, தாயார் இதைத்தானே சொல்லிண்டிருக்கா.  பெண்ணே நீ போகாதே, வீட்டோட இரு, இருன்னு சொல்லிண்டிருக்காளோல்லையோ?  அப்போ இந்த நமஹா சப்தத்தினுடைய அர்த்தம் பட்டா, தாய்ப்பாசுரமாப் பாடிடுவர்.  அதே நாராயணாயங்கிற சப்தத்திலே, இப்போ பகவானை அடைஞ்சுடனும், அனுபவிக்கனும், இது நாராயணாய சப்தத்துக்கு அர்த்தமோல்லையோ?  இதுதான் மகள்ப் பாசுரம்.  அவளைப் பொறுத்தவரைக்கும் வீட்டோட இருக்கறதெல்லாம் பிடிக்காது.  என்னமோ, இப்பவே நாயகனை அடைஞ்சுடனும்ன்னு துடிக்கிறாளோல்லையோ?  அது மகள் பாசுரத்திலே. இதுனாலதான், சம்பந்தத்திலும் உபாயத்திலும் பலத்திலும் உணர்த்தி, துணிவு, பதற்றம் – சம்பந்த ஞானம் உணர்ந்துட்டார்ன்னால், தோழியாப் பாடறார்.  பகவானே உபாயம், நாம பண்றதுக்கு ஒன்னுமில்லேன்னு துணிஞ்சுட்டார்ன்னா, தாயாராப் பாடிடுவர்.  அதே அவன் கிடைப்பனோ, கிடைப்பனோன்னு துடிச்சார்ன்னா, மகளாகப் பாடுகிறார்.  இந்த மூன்று நிலைகள் ஆழ்வாருக்கே இருக்கிற பேதம், அவஸ்தா பேதம்.  அப்போ ஆண், ஞானத்தோடே பேசிருவர்.  பெண் பிரேமத்தோடே பேசுவர்.  அப்போ உள்ளுறைப் பொருளுண்டோன்னு கேட்டால், இந்தத் திருமந்திரத்தினுடைய அர்த்தம் அவர் மனசிலே படப்பட, அதுக்குத் தகுந்தாற்போலே மூன்று நிலைமையோடே ஆழ்வார் பாடுகிறார்.

இதிலே தூதுவிடறது எது என்றால், தன் பக்கத்திலே இருக்கிற ஏதோ ஒரு பட்சியைப் பிடிப்பர்.  நீ போய் பகவானிடத்திலே நான் இருக்கேன்னு சொல்லுன்னு தூது விட்டுடுவர்.  இதுக்குன்னு நான்கு பதிகங்கள் பாடினார்.

அஞ்சிறைய மட நாராய்! * அளியத்தாய்! * நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் * ஆவா என்றெனக்கருளி *
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு * என் விடு தூதாய்ச் சென்றக்கால் *
வன்சிறையில் அவன் வைக்கில் * வைப்புண்டால் என்செய்யுமோ

(திருவாய்மொழி 1.4.1)

முதல் பத்து, நான்காம் திருவாய்மொழி, முதல் பாசுரத்திலே, பக்கத்திலே இருந்தது ஒரு நாரை.  நாரை, கொக்கு, வண்டு, மகன்றில், குருகு, இதைப்போல நிறைய பறவைப் பேர் வரும்.  ஆழ்வார்கள் அவதாரத்தாலே பட்சி ஜாதிக்கே பெருமைன்னு வச்சுக்கலாம்.  ஏன்னா அடிக்கடி அவா பேசிட்டாளோல்லையோ?  இது என்ன நம்ம பூர்வர்கள் எழுதி வைச்சுருக்காள்ன்னா, இராமாவதாரத்தாலே குரங்கு ஜாதிக்கு ஏற்றம், ஆழ்வார்கள் அவதாரத்தாலே பட்சி ஜாதிக்கு ஏற்றம்.  ஏன்னா அங்கேயும் இராமன் குரங்கைத்தானே தூதா விட்டார்?  ஆழ்வார்களும் பறவையைத்தானே தூதா விடறா?  தூது விடுவதுங்கிறது என்ன?  அதுக்கு ஒரு உள்ளுறைப் பொருள் இருக்கு.  தூது விடுவதுங்கிறது நாம போய் ஆச்சார்யன் திருவடிகள்ல விழுவதுதான் தூதுவிடுதல்.  ஏன்னா இந்தப் பறவை போய் நம்மைப் பற்றி பகவானிடத்தில சொல்லப் போறதுன்னுதானே நாயகிக்கு எண்ணம்?  ஆச்சார்யன்தானே நம்மைப் பற்றி பகவானிடத்திலே சொல்லப் போறார்?  எதுக்கு சமாஸ்ரயணம்ன்னு போறோம்?  என்னைப் பற்றி பெருமானிடத்திலே விண்ணப்பியும்ன்னு சொல்றதுக்குத்தானே?  அப்போ அந்தப் பட்சியேதான் ஆச்சார்யன்.  அந்த ஆச்சார்யன் கால்லே விழறதைத்தான் பட்சி கால்ல விழறார். 

பட்சி அப்பப்போ ஆழ்வாருக்கு பக்கத்திலே வந்ததுன்னா நீ போய் பகவானிடத்திலே சொல்லுன்னு தூது விட்டுடுவர்.  என்ன சொல்ல வேணும், அவரை எப்படி அடையாளம் தெரிஞ்சிக்கணும், அங்க ஒரே கூட்டமா இருக்குமே, எனக்கு பயமாயிருக்கேன்னு பட்சி சொல்லும்.  அப்போ இவர் அடையாளம் எல்லாம் சொல்லி அனுப்புவர்.  சங்கு சக்கரம் யார் பிடிச்சிண்டிருக்காரோ, அவர்கிட்ட போய்ச் சொல்லு.  வேற யார்கிட்டயாவது போய்ச் சொல்லிடாதே.  யார் திருமார்பிலே துளசி மணிமாலை தரிச்சிண்டிருக்காரோ, யார் சங்க சக்கரம் பிடிச்சிண்டிருக்காரோ, அவரிடத்திலே நான் சொன்னேன்னு போய்ச் சொல்லு.  பறவை உடனே கேட்கும், என்ன சொல்லணும்?  என்ன சொல்லணுமா, நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம், பராங்குச நாயகின்னு ஒரு வார்த்தை சொல்லு.  அப்புறம் அவர் இருக்காரான்னு பார் அங்கே.  உடனுக்குடன் உன்னோடே கிளம்பி வர ஆரம்பிச்சுருவர்.  ஆழ்வார் நம்மை விட்டு சிரமப்படறாராமே, நான் உடனே வரேன்னு கிளம்பிடுவர்.  பறவைக்கு சந்தேகம், என்னைப் பிடிச்சு சிறையில போட்டுட்டா?  ஏற்கனவே ஹனுமார் இப்படித்தான் போய், வால்லே நெருப்போடே வந்து சேர்ந்தார்.  நீர் என்னைத் தூது விடறீர், நான் போய் என்ன ஆயிடுமோன்னு இந்தப் பறவைக்குக் கவலை.  ஆழ்வார் சொன்னார், ‘வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யும்’ – அவன் கொஞ்ச நாள் சிறையில வச்சுட்டாத்தான், எனக்காக இரேன்.  நான் சீதையாப் பிறந்துருக்கச்சே இருக்கலே?  தேவஸ்தீரிகள் எல்லாரையும் இரட்சிக்கறதுக்காக, தேவர்கள் கஷ்டப்படறாளே, இராட்சசர்கள் துன்புறுத்துராளே, அவர்களை முடிக்கணும்ங்கிறதுக்குத்தானே நான் போய் பத்து மாசம் சிறையில இருந்தேன்.  நம்மாழ்வார் தன்னையே சீதையா நினைச்சிண்டு சொல்லிக்கறார் இப்போ, நானே சிறையில இருந்தேனே அசோகவனத்திலே.  எனக்காக நீ இருந்தா என்னன்னு இந்தப் பறவையைக் கேட்கறார்.  அப்புறம் ஆழ்வார் பாட்டில கொஞ்சம் நிதானமாப் பார்த்தோம்ன்னால், ‘என் விடு தூதாய் சென்னக்கால் வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யும்’,  என் விடு தூதாய் – நான் தூது விடறேன், நீ போறே, ஞாபகம் வச்சுக்கோன்னார்.  தெரியுமே, நீர்தான் தூது விடறீர்.  அதுல சந்தேகமில்லையேன்னா, இல்லே.  இராமனும் ஹனுமாரைத் தூது விட்டான், சீதையும் ஹனுமாரைத் தூதுவிட்டாளோல்லையோ?  அதே ஹனுமானை சீதையும் இராமனிடத்திலே அனுப்பிச்சாளே?  இராமனிடத்திலேர்ந்து ஹனுமார் அக்கரைக்குப் போனார், சீதையினிடத்திலேர்ந்து ஹனுமார் இக்கரைக்கு வந்துட்டார்.  இதுல இராம தூதனாப் போறச்சேவும் ஒரு பரிசு கிடைச்சது.  சீதா தூதனா வரச்சேவும் பரிசு கிடைச்சது.  இராம தூதனா போறச்சே, வாலில் நெருப்பு பரிசு.  இதான் கிடைச்சது.  சீதா தூதனா திரும்பி வரச்சே, திரும்பி வந்த ஹனுமானைப் பார்த்து அணைத்துக் கொண்டு, இதைவிட நான் உனக்குக் குடுக்கறதுக்கு ஒன்றுமில்லே என்று இராமன் நன்றி தெரிவித்தானோல்லையோ?  ஆழ்வார் ஞாபகப்படுத்தறார், சீதா தூதனாப் போறச்சே இராமன் ஆலிங்கனம் கிடைச்சது.  இராம தூதனா போறச்சே வாலில் நெருப்புக் கிடைச்சது, ஞாபகம் இருக்கோல்லையோ?  என் விடு தூதாய் சென்னக்கால், இப்போ நீ போறது பராங்குச நாயகியின் தூதாக.  ஒன்னும் ஆகாது உனக்கு.  உனக்கு பகவான் பார்த்து, சத்காரம் பண்ணி, உன்னை உட்கார்த்தி வைச்சு மரியாதை பண்ணித்தான் பேசுவனே தவிர, ஏன்னா அனுப்பிச்சுருக்கற அதிகாரி அப்படிப்பட்டவர்ன்னு புரிந்து கொள்.  யாரோ உன்னை அனுப்பலே, நாயகி பாவத்தில தலை சிறந்திருக்கற ஆழ்வார் உன்னை அனுப்பிச்சுருக்கார், அதனாலே உனக்கு ஒண்ணும் ஆகாது, போ.

நேரே இங்கேர்ந்து நாரை கிளம்பிப் போச்சு.  பெருமாளைப் பிடிச்சுடுத்து. பிடிச்சு அவன்கிட்ட விஷயத்தைச் சொல்லணுமோல்லையோ?  என்ன சொல்லணும்ன்னு ஆழ்வார்கிட்ட கேட்டு வச்சிருந்தது.

நல்கித் தான் காத்தளிக்கும் * பொழில் ஏழும் வினையேற்கே *
நல்கத் தான் ஆகாதோ * நாரணனைக் கண்டக்கால் *
மல்கு நீர்ப் புனல் படப்பை * இரை தேர் வண் சிறு குருகே! *
மல்கு நீர்க் கண்ணேற்கோர் * வாசகம் கொண்டருளாயே

(திருவாய்மொழி – 1.4.5)

அந்தப் பொண்ணு அழுதுண்டே இருக்கான்னு போய் ஒரு வார்த்தை சொல்லு.  நீ வேற ஒன்னும் சொல்ல வேண்டாம் என்னைப் பத்தி.  சொல்லிட்டா கிளம்பி வந்துருவரா?  நீ அழுதுண்டே இருக்க வேண்டியதுதான்.  அவர் வருவரா?  நித்ய சூரிகளுக்கு நாயகன், இந்திரனுக்கெல்லாம் இந்திரன், எத்தனை பேர் இருக்கப் போறாளோ, என்னை உள்ள விடுவாளோ, மாட்டாளோ?  யாருன்னே எனக்குத் தெரியலையே, நிக்கறதுக்கே எனக்குப் பயமாயிருக்கே, இத்தனையும் அந்த நாரை சொல்லித்து.  போயேன், நான் சொன்னேன்னு ஒரு வார்த்தை சொல்.

அருளாத நீர் அருளி * அவர் ஆவி துவராமுன் *
அருள் ஆழி புட்கடவீர் * அவர் வீதி ஒருநாள் என்று *
அருள் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி *
அருள் ஆழி வரி வண்டே! * யாமும் என் பிழைத்தோமே

(திருவாய்மொழி – 1.4.6)

சட்டுன்னு வண்டுக்கு மாறிடுவர்.  நாரையைத் தூது விட்டுண்டு இருப்பர்.  மகன்றில் பட்சி, குருகு, வண்டு, ஓரோரு பறவையாக அந்தப் பத்துப் பாசுரத்துக்குள்ள தூது விட்டார்.  நான் போய் பகவான்கிட்ட என்ன சொல்லணும்?  உடனடியா ஆழ்வார் கோவில் வாசலுக்கு வா.  ஆழ்வாருக்கு நீ கருட வாகனத்தோட சேவை சாதிக்கணுமாம்.  உடனே வரச்சொன்னார்ன்னு சொல்லச் சொன்னார்.  போச்சு வண்டு.  போய் பெருமான் முன்னாடி நின்னுண்டு, நான் பராங்குச நாயகி அனுப்பிச்சு வந்திருக்கேன்.  நீர் உடனடியா வாரும், அப்படின்னு சொல்லித்து வண்டு.  பெருமான் பார்த்தார், அவருக்குத் தெரிஞ்சு போச்சு.  இந்த வண்டு வந்ததுன்ன உடனே, கூட்டமா எல்லா தேவர்கள், நித்ய சூரிகளெல்லாம் இருந்தாளோல்லையோ, அங்கேர்ந்து வந்து, ‘நீர் உலகத்தையெல்லாம் இரட்சிக்கிறவராமே, ஆனா ஒருத்தியை மட்டும் இரட்சிக்காம விட்டுருக்கீறாமே?  அதைத்தான் பராங்குச நாயகி சொல்லிட்டு வரச்சொன்னாள்ன்னு சத்தம் போட்டு பேசிச்சு இது.  பெருமான் கிட்டக்க வந்து, ஏன் சத்தம் போடறே, கிட்டக்க வா.  யாரும் சத்தம் போட்டா எனக்குப் பிடிக்காது.  ஏன், போட்டா என்னனுட்டா, அப்போ ஒருத்தனை மட்டும் இரட்சிக்கலேன்னா பேர் தங்குமா?  உலகத்த அத்தனையும் இரட்சித்தாத்தான் நாராயணன்னு பேர்.  உலகத்துல ஒருத்தனை மட்டும் விட்டுட்டு, மத்த எல்லாரையும் இரட்சிச்சா நாராயணன்ங்கிற பேர் இருக்குமோ?  அதைத்தான் இரகசியம் சொல்லி அனுப்பிச்சிருந்தார் ஆழ்வார்.  நீ போய் ஒரே ஒரு கேள்வி கேளு, நாராயணன்ங்கிற பேர் அவனுக்கு வேணும்ன்னா உடனடியா வரச்சொல்லு.  வேண்டாம்ன்னா விட்டுடச் சொல்லு.  இந்த இரகசியத்தைப் போய் அந்த வண்டு பேசிடுத்து.  உமக்கு நாராயணன்னு பேராமே, ஆனா ஆழ்வாரை இன்னும் நீ இரட்சிக்கலையாமே?ன்ன உடனே, சத்தம் போடாதே, உன்னோட வரேன், வா, அப்படின்னு பெருமான் உடனே கிளம்பி வந்துட்டார்ன்னுதான் வியாக்யாதார் தெரிவிக்கிறார்.  ஆக தூதுவிட்டாலும் ஆழ்வார் தூது விடுவது ஸ்ரீதேவி நாச்சியாரே தூதுவிட்டார்ப்போலே.  தன்னையே சீதையாக நினைத்துக் கொண்டுதான் ‘அஞ்சறை மட நாரை’யிலே தூது விடுகிறார் ஆழ்வார்.  இது முதல் பத்திலே நான்காம் திருவாய்மொழியில் நாயகி பாவத்திலே பராங்குச நாயகி பாடினது.

(தொடரும்)

-(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – நாலாயிரத்தில் நாயகி உபந்நியாசம் – Boston)